பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 ஒவ்வொரு வருஷமும் வசூலிக்கப்படுகிற மொத்த வரித் தொகையில், பத்து சதவிகிதம் ராஜ்ய அரசாங்கக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். மீதி 90 சத விகிதத்தைப் பிரதேச அதிகார சபைக்கு கொடுக்க வேண்டும். ஆல்ை, இந்த மீதித் தொகையை மேற்சொன்ன பிரதேச அதிகார சபைக்கும், பக்கத்திலுள்ள வேறு ஏதேனும் ஒரு பிரதேச சபைகளுக்கும் இடையே அரசாங்கம் நிர்ண யிக்கும் விகிதத்தில் விநியோகிக்க வேண்டும் எனக் கட்டளே யிடலாம். மேலும், ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிக்குள் நடைபெறும் கேளிக்கைகள் சம்பந்தமாக, மேற்சொன்ன மொத்த வரித் தொகையில் 90 சத விகிதத்தை, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் அதன்கீழுள்ள பஞ்சாயத்துக் களுக்கும் இடையே அரசாங்கம் நிர்ணயிக்கக் கூடிய விகிதத்தில் விநியோகிக்க வேண்டும். அல்லாமலும், இந்தப்பிரிவில் சொல்லியிருப்பது எதுவும், மேற்படி வரித் தொகையில் 90 சத விகிதம் முழுவதையும் ஒரு பிரதேச அதிகார சபைக்காவது, அல்லது நிலமைக்கு ஏற்ற வாறு பிரதேச அதிகார சபைகளிடையே இன்ன விகிதத்தில் விநியோகிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் உத்தரவு (a) மேற்படி உத்தரவு, உண்மை அல்லது சட்டப் பிரச்னை குறித்த ஒரு பிழை காரணமாக பிறப்பிக்கப்பட்டது என்ருவது, (b) மேற்படி உத்தரவு, ஒரு முக்கியமான அம்சத்தை கருத்தில் கொள்ளாமல் அல்லது அந்த விஷயம் தெரியாமல் இருக்கும்போது பிறப்பிக்கப்பட்டது என்ருவது, (c) மேற்படி உத்தரவு, பிறப்பிக்கப்பட்ட பிறகு, மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்ருவது, - ராஜ்ய ஆரசாங்கம் கருதில்ை, அந்த உத்தரவை அவர்கள் எப்பொழுதாவது மாற்றுவதற்கு இப்பிரிவில் சொல்லியுள்ள எதுவும் தடை உண்டாக்குவதாகக் கருதப்பட