பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 12. தேர்தல் ரகசியத்தை மீறுவோர்மீது நடவடிக்கை (ப.ச. 24.) (ப.ச. 179) விதிகள் 1. ஒட்டுச் சாவடியில் வந்திருக்கிற ஒட்டுச் சாவடி அதிகாரி, குமாஸ்தா அல்லது இதர நபர் எவரும் சட்ட பூர்வமான காரியத்தை தவிர யாராவது ஒரு வாக்காளரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த அபேட்சகருக்கு வாக்கு அளித்தார் என்பதைப்போன்ற எந்த தகவலேயும் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. 2. 1-வது விதியை மீறியதற்காக நூறு ரூபாய் வரை யில் அபராதத் தண்டனை விதித்து வாங்கப்படும். 18. தலைவருடைய அலுவல்களை வேறு. ஒருவருக்கு பிரித்துக் கொடுத்தல் (ப. ச. 34. (2) விதிகள் தலைவர், பஞ்சாயத்து அலுவல் காரணமாக தமது அதிகார எல்லேயைவிட்டு, தமிழ்நாட்டிற்குள் வேறு எங்கே யாவது போயிருந்தால், அவரது அலுவல்களில் துணைத் தலைவருக்குப் பிரித்துக் கொடுக்கப்படுகிற அலுவல்களேத் தவிர மற்ற அலுவல்கள், பஞ்சாயத்துச் சட்டத்தின் 34 (2) உட்பிரிவின்கீழ் துணைத் தலைவரைச் சேரமாட்டா. 2. தலைவர், மேற்படி சட்டத்தின் 85-வது பிரிவின்படி, அவர் நிர்வாக அதிகாரியாகவும் உள்ள நிர்வாக அதிகார் அலுவல்கள் உட்பட தம்முடைய அலுவல்களில் எதையும் துணைத் தலைவருக்கோ அல்லது ஒரு அங்கத்தினருக்கோ அவர் பிரித்துக் கொடுப்பதை பஞ்சாயத்து வெளிப்படை யாகத் தடுக்கும் தமது அதிகாரங்களேப் பிரித்துக் கொடுக்கக் கூடாது. - - 3. தலைவர் நிர்வாக அதிகாரியாகவும் உள்ள, நிர்வாக அதிகார அலுவல்கள் உள்பட தலைவரின் எல்லா அலுவல் களும் பிரித்துக் கொடுக்கப்பட்ட அங்கத்தினர், அவ்வாறு