பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 8. கடனைத் தீர்க்கச் சக்தியற்றிருத்தல் பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் வழக்கமாகக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேற்சொன்ன அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் இன்சால் வென்ஸி ஆனவர்-(கடனத் தீர்க்கச் சக்தியற்றவர்) என்று கூறப் பட்டால் அல்லது அறிவிக்கப்பட்டால் அல்லது இரண்டு ஆண்டு காலத்தில் சாதாரண சூழ்நிலைகளில் கொடுத்துத் தீர்க்க முடியாத அளவுக்குக் கடன்பட்டிருந்தால், அல்லது அவருடைய ஊதியத்தில் ஒரு பகுதி கடனுக்காக அடிக்கடி பிடிக்கப்பட்டால் அல்லது தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு கால அளவுக்குப் பிடிக்கப்பட்டால் அல்லது சாதாரண சூழ் நிலேயில் இரண்டு ஆண்டு கால அளவுக்குள் திருப்பிச் செலுத்த முடியாத ஒரு தொகைக்காகப் பிடிக்கப்பட்டிருந் தால், அவர் இந்த விதியை மீறினதாகக் கருதப்படுவார்; ஆல்ை அவர் மேற்படி இன்சால்வென்ஸி ஆனதும் அல்லது கடனளியாயிருப்பதும் சாதாரணமாக அவர் எதிர்பார்த் திருக்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத நிலையில்ை ஏற்பட்டது, அவருடைய ஊதாரித்தனத்தினலோ அல்லது ஒழுக்கக்கேடான பழக்கங்களினலோ ஏற்பட்டதல்ல என்று அவர் நிரூபித்தால் இந்த விதியை அவர் மீறினதாகக் கருதப் படமாட்டார். பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் இன்சால்வென்ஸி ஆனவர் என்று தீர்மானிக்கும் பொருட்டு விண்ணப்பித்தாலும் அல்லது தீர்மானிக்கப்பட்டாலும் அல்லது அறிவிக்கப்பட்டாலும், அவர் அதைப்பற்றி, தாம் பணியாற்றும் அலுவலகத்தின் அல்லது துறையின் தலேவ ருக்கு அறிவிக்க வேண்டும். 9. அலுவலக தஸ்தாவேஜகள் தகவல்களை தெரிவித்தல் பஞ்சாயத்தின் அலுவலர் அல்லது ஊழியர் யாருக்காவது பஞ்சாயத்து, அதிகாரம் அளித்திருந்தாலன்றி மற்றபடி அவருடைய அலுவல் சம்பந்தமாக அவருடைய பொறுப்பில் விடப்பட்ட அல்லது அலுவல் முறையில் அவரால் தயாரிக்கப் பட்ட அல்லது சேகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தஸ்தாவேஜ? அல்லது தகவலேப் பெற்றுக்கொள்ள அதிகாரம் இல்லாத, பஞ்சாயத்தின் வேறு யாரேனும் ஒரு அலுவலர் அல்லது ஊழியருக்கு அல்லது மற்ருெரு ஸ்தல ஸ்தாபனத்தின்.ஓர் அலுவலர் அல்லது ஊழியருக்கு அல்லது உத்தியோகஸ்தர்