பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 கையில் அவர் தயாரித்த அறிக்கைகளுக்கும் அவர் வெளி யிட்ட கருத்துக்களுக்கும் இந்த விதிகளில் கண்டுள்ளது எதுவும் பொருந்தாது. (2) பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் தமது சொந்தப் பெயரில் ஏதாவது ஒரு தஸ் தாவேஜை வெளியிட அல்லது தமது சொந்தப் பெயரில் பத்திரிகையில் செய்தி வெளியிட அல்லது பொது மக்களுக்கு உரை நிகழ்த்த உத்தேசித்து, அதில் அடங்கியுள்ள விவரங்கள் சம்பந்தமாக (1) உட்பிரிவின்படி விதிக்கப்பட்ட வரை யறைகள் பயன்படுகின்றனவா என ஏதேனும் ஒரு சந்தேகம் எழக்கூடுமானல், அவர் வெளியிட உத்தேசித்த தஸ்தா வேஜூ, பத்திரிகையில் வெளியிட உத்தேசித்த செய்தி அல்ல்து நிகழ்த்த உத்தேசித்த உரையின், குறிப்பின் நகலே கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். மேற்கூறியபடி கலெக்டரின் அனுமதியுடன் அல்லாமல் அவர் கட்டளே யிடக்கூடிய மாற்றங்கள் எதையும் செய்யாமல் மேற்படி தஸ் தாவேஜை வெளியிடக்கூடாது ; செய்தியை பத்திரி கையில் வெளியிடக்கூடாது அல்லது உரையை நிகழ்த்தக் கூடாது. 12. கமிட்டிகளிடம் சாட்சியம் அளித்தல் பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் நிர்வாக அதிகாரியின் அனுமதியை முதலில் பெற்றுக்கொள்ளாமல் ஒரு சமிட்டியின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கக்கூடாது. அவ்வாறு அவர் அளிக்கும் சாட்சியத்தில் பஞ்சாயத்து அல்லது மாநில, மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளில் அல்லது முடிவுகளில் குறை கூறக்கூடாது. நீதி விசாரணேகளில் ஆஜராகவும், பதில்கள் அல்லது சட்சியம் கொடுக்கவும் வற்புறுத்த அதிகாரம் வாய்ந்த சட்ட பூர்வமான கமிட்டிகளின் முன்னிலையில் அளிக்கப் |டும் சாட்சியத்திற்கு இந்த விதி பயன்படாது. 18. தேர்தல்களில் பங்கெடுத்துக் கொள்ளுதல் பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் சட்ட சபைக்கு அல்லது ஸ்தலஸ்தாபனத்திற்கு நடக்கும் ஏதாவது ஒரு தேர்தலில் ஒர் அபேட்சகராக நிற்கக்கூடாது. அல்லது யாரேனும் ஒரு அபேட்சகருக்கு உதவி புரிவதற்காக அல்லது