பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 ஏதேனும் ஒரு காரியத்துக்கு மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் பொறுப்பாக வேண்டும். 18. அலுவலர் அல்லது ஊழியரின் நடவடிக்கை அல்லது நடத்தையின் உரிமையை நிலைநாட்டுதல் பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர், அப வாதமான தாக்குதல்களிலிருந்து தம்முடைய அலுவலக நடவடிக்கை அல்லது நடத்தையின் உரிமையை நிலைநாட்ட நிர்வாக அதிகாரியின் முன் அனுமதியைப் பெருமல், நீதி மன்றத்தின் அல்லது பத்திரிகையின் உதவியை நாடக் கூடாது. பஞ்சாயத்து அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர், தமது சொந்த் நடவடிக்கைகளின் அல்லது நடத்தையின் உசி மையை நிலைநாட்டும் உரிமையை இந்த விதியில் குறிப் பிட்டது எதுவும் வரையறுக்காது அல்லது மற்றபடி பாதிக்காது. . . 17. வேலையிலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கும்போது விலாசத்தைத் தெரிவித்தல் பஞ்சாயத்தின் ஒர் அலுவலர் அல்லது ஊழியர் வேலையி லிருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கும்போது, அவர் எங்கும் செல்ல சுதந்திரம் உள்ளவராவார். ஆனால், அவர் தமது விலாசத்தை நிர்வாக அதிகாரியிடம் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். அவரது நடத்தை குறித்து விசாரணை செய்யும் அதிகாரியிடமும் அவர் தமது விலாசத்தை கொடுக்க வேண்டும், அவருடைய நடத்தை குறித்து நடக்கும் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறும் உத்தரவுகள் எல்லாவற்றையும் அனுசரித்து நடக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறி ல்ை, அவர் வராமலிருக்கும்போதே விசாரணை நடத்தப் படும். 18. மேல் அதிகாரிகளிடம் செல்வாக்கைப் பயன்படுத்துதல் பஞ்சாயத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் தமது முன்னேற்றத்திற்காக மேலதிகாரிகளிடம், ஏதாவது ஒரு அரசியல் செல்வாக்கை அல்லது அயலார் செல்வாக்கை கொண்டுவரக்கூடாது அல்லது கொண்டுவர முயற்சிக்கக்