பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 (3) துணை (1) விதியின்கீழ் நிச்சயித்த தேதியன்ருே அதறகு முன்பாகவோ வரப்பெற்ற ஆட்சேபனைகளே பஞ்சா யத்து விசாரிக்க வேண்டும். அவ்வாறு விசாரிக்கையில், கட்சிக்காரர்கள் தங்கள் ஆட்சேபனைகளே உறுதிப்படுத்த் வாசகமான, பத்திர ரீதியான சாட்சியங்களே எடுத்துச் சொல்வதற்கு வேண்டிய நியாயமான வாய்ப்பினைக் கொடுக்க வேண்டும். 6. விசாரணை பூர்த்தியான பிறகு, பஞ்சாயத்து, ஆட்சேபனைகளேத் தள்ளிவிடலாமென்றும், சென்னே பஞ்சர் யத்துச் சட்டத்தின் 87 (1) (b) பிரிவின்படி கட்டளை பிறப் பிப்பது அவசியமென்றும் கருதினுல் அவ்வாறு அப்பஞ்சா யத்து அது குறித்த முடிவைத் தக்க காரணங்களுடன் எழுதி வைத்து, கட்டளே ஒன்றைப் பிறப்பிக்க அனுமதி கோரி, பின்வரும் விவரங்களடங்கிய விண்ணப்பம் ஒன்றை மாவட்டக் கலெக்டருக்குக் கொடுக்க வேண்டும்: (i) பஞ்சாயத்து தீர்ப்புகளின் நகல். (ii) கட்டளே பிறப்பிப்பதன் அவசியத்தை நிரூபிக்கிற தஸ்தாவேஜுகள் 5-வது விதியைச் சேர்ந்த (1) துஜன விதியில் சொல்லிய அறிவிப்பு வெளியிடுதல் ஆகியவற்றுடன் விசாரணை சம்பந்தமான கட்டுகள். - (iii) மேற்படி நிலம் அல்லது அதன் பகுதிமீது நிலத்தின் சொந்தக்காரருக்கு அல்லது ரயத்துக்களுக்கு உள்ள இதர சம்பிரதாய உரிமைகள் யாவும் ஆலோசஆனக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும், அத்தகைய கட்டளை ஒன்றைப் பிறப்பித்தால் போதுமான உரிமைகள் கொடுக்கப் பட்டதாகும் என்று தாம் சந்தேகமறத் திருப்தியுறுவதாகவும் குறிப்பிட்டு எழுதிய சான்றிதழ் ஆகியவை. 7. மேற்சொல்லிய விவரங்கள், சான்றிதழ் அடங்கிய விண்ணப்பம் வரப்பெற்றவுடன் மாவட்டக் கலெக்டர், தகுதி என்று தாம் கருதும் விசாரணை நடத்திய பிறகு, மேற்படி நிலம், ஆரம்பத்தில் கூறிய காரியத்துக்கு இனி தேவையில்லே யென்று சென்னே 1908-ஆம் ஆண்டு எஸ்டேட்டு நிலச் சட்டத்தின் 20-A பிரிவைச் சேர்ந்த (1)-வது உட்பிரிவின் (a) பகுதியின்படி அறிவிப்பு ஒன்றைப் பிறப்பிப்பார். மேலும், அவர் மேற்படி நிலம், மேற்படி விண்ணப்பத்தில் குறிப்பிட்ட காரியத்துக்குப் பயன்படுத்தப்படலாமென்று பஞ்சாயத்துச்