பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 (2) பஞ்சாயத்து நிர்வாகத்துக்கென, கி ரா மத் தலைவர்கள் வைத்து வரும் பதிவேடுகளிலிருந்தும், கணக்கு களிலிருந்தும் கிடைக்கும் இதர விவரங்கள். ஆல்ை, மேற்படி வகையின்கீழ் வருகிற ஏதாவது ஒரு விஷயம் பற்றிய தகவலே சம்பந்தப்பட்ட பிர்க்காவின் ரெவின்யு இன்ஸ்பெக்டர் மூலமாகக் கேட்க வேண்டும். 60. சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பும் அதிகாரம் fu. æ. 178. (2) (XXV)] விதிகள் 1. ஒரு பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரி யாராவது ஒரு நபருக்கு, பஞ்சாயத்து சட்டத்தின் பிரிவுகளின்படி வரி விதிப்பு அல்லது பார்வையிடுதல் அல்லது ஏதாவது ஒரு லேசென்ஸ் அல்லது அனுமதி கொடுத்தல் சம்பந்தமாக சாட்சியம் அளிக்கும்படி அல்லது தஸ்தாவேஜுகளைக் கொண்டு வந்து காட்டும்படி சம்மன் அனுப்பலாம். 2. 1-வது விதியின்கீழ் நிர்வாக அதிகாரி அனுப்பிய சம்மனுக்கு கீழ்ப்படிய தவறும் ஒருவருக்கு 10 ரூபாய் வரை அபராதத் தண்டனை விதிக்கப்படத் தக்கதாகும். 61. முத்திரைகளை உபயோகித்தல் [L. G. 178. (2) xxvi] விதிகள் 1. பஞ்சாயத்துச் சட்டம் அல்லது அதன்கீழ் செய்யப் பட்ட விதி, துணை விதி அல்லது ஒழுங்கு முறையின்கீழ் நிர்வாக அதிகாரிகள், அல்லது பஞ்சாயத்து உத்தியோகஸ் தர்களின் கையொப்பம் ஒவ்வொரு லேசென்ஸில், அனு மதியில், அறிவிப்பில், பில்லில், அட்டவனேயில் சம்மன் அல்லது இதர தஸ்தாவேஜில் கண்டிருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், சந்தர்ப்பத்திற்கேற்ப, நிர்வாக அதிகாரியின் அல்லது அத்தகைய அதிகாரியின் கையொப் பத்தினுடைய முத்திரை அதில் கண்டிருந்தால் அது முறைப் படி கையொப்பமிடப்பட்டிருப்பதாகக் கருதப்படும். -