பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அ டி யி ற் கண் ட புறம்போக்குகளேப் பயன்படுத்துவதை முறைப்படுத்துவதற்குப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது: (i) மேய்ச்சல் தரைகள்; (ii) போரடிக் களங்கள்; (iii) சுடுகாடு, இடுகாடு; (iv) கால்நடைத் தொட்டி; (v) வண்டி கள் நிற்குமிடங்கள்; (wi) தோப்புகள். முன்பு இந்தப் புறம் போக்குகள் பஞ்சாயத்தில் நிலைபெறவில்லே. ஆணுல், புதிய சட்டத்தின் 86 (2) பிரிவின்கீழ் இவை பஞ்சாயத்துகளில் நிலைபெறுகின்றன. ஆகவே, அவற்றைப் பஞ்சாயத்துகளில் நிலேபெற்றுள்ள புறம்போக்குகள் என அழைக்கலாம். ஒவ்வொரு பஞ்சாயத்துக் கிராமம் அல்லது பட்டனத்திற் காகவும் இத்தகைய புறம்போக்குகளின் பட்டியல்க்இளத் தயாரித்து, அவற்றைச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளிடம் ஒப்படைப்பது அவசியமாகிறது. அதற்குப் பின்னர் பஞ்சா யத்துகள் விதிகளில் நிர்ணயிக்கப்படக்கூடிய வரையறை களுக்கும் மேல்விசாரணைக்கும் உட்பட்டு அத்தகைய புறம் போக்குகளேப் பயன்படுத்துவதை முறைப்படுத்தும். 5. பஞ்சாயத்தில் நிலைபெற்றுள்ள நீர்வழங்கு ஆதாரங்கள் புதிய சட்டத்தின் 84 (1) பிரிவின்கீழ், (பழைய சட்டத் தின் 77.(1) பிரிவுக்கு இது நிகரானது. பொது நீர் வழங்கு ஆதாரங்கள், நீர் ஊற்றுக்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள், சுனேகள், கிணறுகள், குழாய்கள், இதர தண்ணிர் ஆதாரங் கள் ஆகியவையும் அவற்றை அடுத்துள்ள, தனியார் சொத்து அல்லாத ஒரு நிலமும் பஞ்சாயத்தில் நிலேபெற வேண்டும். மேலும், அத்தகைய வேலே அல்லது நிலம் பாசன வேலேயுடன் இணைக்கப்பட்டிராவிட்டால், பஞ்சா யத்தின் மேல்விசாரணைக்கு உட்பட்டதாகும். மேற்படி பிரிவைச் சேர்ந்த (2) உட்பிரிவின்கீழ், அரசாங்கத்தார் அறிவிப்பு வெளியிட்டு, ஒரு நீர்வழங்கு ஆதாரத்தையும் அதனே அடுத்துள்ள நிலத்தையும், பஞ்சாயத்தைக் கலந்த்ா லோசித்து பிறகு மேற்கொள்ளலாம். இத்தகைய நீர்வழங்கு ஆதாரங்கள் அனைத்தையும் அதனே அடுத்துள்ள நிலத்தை யும் பற்றிய தகவல்களேச் சேகரித்து அவற்றைச் சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்தின்கீழ் வைக்க வேண்டிய்து அவசியமாகிறது. (2) உட்பிரிவின்கீழ் குறிப்பிட்டுள்ள நடவடிக்கையை அவசியம் இருப்பின் பின்னர் மேற் கொள்ளலாம். -