பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 முறையில் அதற்காக கிராமக் கர்ணத்தை நியமித்துக் கொள்ளவோ அல்லது அந்தந்த ஊருக்குத் தகுந்த மாதிரி எது பொருத்தம் என்று படுகிறதோ அந்த மாதிரி ஏற்பாடு களேச் செய்து கொள்ளவோ, கிராமப் பஞ்சாயத்து களுக்குச் சுதந்தரம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது ஆனால், அப்படிப்பட்ட ஏற்பாடுகளில்ை உண்டாகின்ற செலவு தொகையானது சாதாரணமாக பஞ்சாயத்துக்கு வருகின்ற வருவாய்க்கு, முற்றும் கட்டுப்படாத வகையில் அதிகமாக இருக்கக்கூடாது. கிராம அபிவிருத்தி ஸ்தல நிர்வாகத் துறையின் 1961-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதியுள்ள அரசாங்க உத்தரவு எண் 411-ல் 8-வது பாராவில், ஒரு கிராமப் பஞ்சாயத்தானது கிராமக் கர்ணத் தின் உதவியைத் தேடாமல், மேற்கண்ட வேலேகளுக்காக ஓர் குமாஸ்தாவை நியமனம் செய்து, அதல்ை ஏற்படுகின்ற மொத்தச் செலவானது, கிராம வீட்டு வரி, இணே மானியத் தொகையைச் சேர்த்து, அதிகார பூர்வம் இல்லாத அரசாங்க மானியங்கள் எல்லாவற்றையும் சேர்க்காமல் அந்தப் பஞ்சாயத்துக்கு ஆண்டு ஒன்றுக்குக் கிடைக்கின்ற சாதாரண வருவாயில் ஆறேகால் சதவிகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று விளக்கப்பட்டுள்ளது. 2. ஒர் குமாஸ்தாவை நியமனம் செய்து, அதல்ை உண்டாகின்ற செலவு தொகைக்கு மேலே சொல்லியுள்ள வகையில் கிடைக்கின்ற ஆண்டு வருமானத்தில் 64 சத விகிதத்திற்குமேல் போகக்கூடாது என்று விதித்துள்ள வரம்பு கொஞ்சம்கூட போதாத நிலேயில் உள்ளது என்றும், இந்த் விகிதத்தில் பகுதி நேர குமாஸ்தாவின் பணிகளேப் பெறுவது என்பது அநேக பஞ்சாயத்துகளால் இயலாமல் உள்ளது என்றும் அரசாங்கத்திற்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. 1961-ம் ஆண்டு மே மாதத்தில் உதகமண்டலத்தில் நடை பெற்ற கலெக்டர்கள் மாநாட்டில் இந்தப் பிரச்னேயும் விவாதிக்கப்பட்டது. - 3. (1) அரசாங்கத்திற்குச் செய்யப்பட்டுள்ள கோரிக்கை களே வைத்தும் (ii) கலெக்டர்கள் மாநாட்டில் இது பற்றி நடைபெற்ற ஆலோசனைகளே ஒட்டியும், அரசாங்கம் இந்த விஷயத்தை கவனத்துடன் பரிசீலனை செய்து பார்த்தது. ஆண்டின் சாதாரண வருமானத்தில் 64 சதவிகிதம் என்று வரையறுக்கப்பட்டுள்ள விகிதமானது, பஞ்சாயத்து குமாஸ் தாவுக்கு அளிக்கின்ற சம்பளத் தொகைக்குப் போதாது என்பதை அரசாங்கத்தார் ஒப்புக்கொள்கின்றனர். அதே சமயத்தில், முன்பே குறிப்பிட்டுள்ள மாதிரி, ஓர் குமாஸ்