பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 (b) சாட்சிகளே வரவழைக்கச் செய்தலும், அவர்களுக் காகும் செலவுகளுக்காகத் தொகை கட்டிவைக்கச் செய்தல்; (c) தஸ்தாவேஜூகளேக் கொண்டுவரச் செய்தல்; (d) பிரமாணத்தின் மீது சாட்சிகளே விசாரித்தல்; (e) பிரமானத்தின் மீது எடுக்கப்பட்ட சாட்சியத்தைப் பெறுதல்; (f) சில சாட்சிகளே விசாரிக்கக், கமிஷன்களே நிய மித்து அனுப்புதல். மேலும் தேர்தல் நீதிமன்றம் யாருடைய சாட்சியம் முக்கியமானதெனக் கருதுகிறதோ அவரைத் தானகவே வரவழைத்து விசாரிக்கலாம். 7. (1) தேர்தல் மனு எதுவும் தேர்தல் நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் வாபஸ் வாங்கப்படலாகாது. (2) ஒன்றுக்கு மேற்பட்ட மனுதாரர்கள் இருந்தால், மனுவை வாபஸ் பெறுவதற்கான விண்ணப்பம் எதையும் எல்லா மனுதாரர்களின் சம்மதம் இல்லாமல் கொடுக்கக் கூடாது. - - (3) வாபஸ் பெறுவதற்கான விண்ணப்பம் கொடுக் கப் பட்டால், அந்த விண்ணப்பத்தை விசாரிப்பதற்கான தேதியை நிச்சயிக்கும் அறிவிப்பு ஒன்றை அந்த மனுவின் மற்றக் கட்சிக்காரர்கள் அனேவருக்கும் கொடுக்க வேண்டும்; மேலும், அதை 5-வது விதியில் குறித்துள்ள முறையில் விளம்பரப்படுத்த வேண்டும். (4) அந்த விண்ணப்பம் வேறு பரஸ்பர உடன்படிக் கையை அல்லது பணம் கொடுப்பது போன்ற காரணத்துக் காக கொடுக்கப்பட்டிருக்கிறதென தேர்தல் நீதிமன்றம் கருதி, அதை அனுமதிக்கக்கூடாதென அபிப்ராயப்பட் டால், வாபஸ் பெறுவதற்கான விண்ணப்பம் அனுமதிக்கப் i fi- traffi-L-Irgil. (5) விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டால் (a) எதிர் மனுதாரர் செலவழித்த தொகை முழு வதையுமோ அல்லது அதன் ஒரு பகுதியையோ தேர்தல் நீதிமன்றம் தகுதியெனக் கருதுகிறபடி மனுதாரர் கொடுக்க வேண்டுமென அவருக்கு உத்திரவிடவேண்டும். 必 (b) அவ்வாறு வாபஸ் பெற்றதைச் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கமிஷனருக்கும் தேர்தல் அதிகாரிக் கும், தேர்தல் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். 8. (1) விசாரணைச் செலவு குறித்து நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவை;