பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 பெருமல் நீதிமன்றத்தின் அல்லது பத்திரிகையின் உதவியை நாடக்கூடாது. பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் தமது சொந்த நடவடிக்கைகளின் அல்லது நடத்தையின் உரிமையை நில நிறுத்தும் உரிமையை இந்த விதியில் கண்டது எதுவும் வரையறுக்காது அல்லது மற்றபடி பாதிக்காது. 17. வேலையிலிருந்து நிறுத்தி வைத்திருத்தல் பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் வேலேயிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் எங்கு போக விரும்பிலுைம் போகலாம் ; ஆளுல், அவர் கமிஷனரிடம் தமது விலாசத்தை கொடுத்துச் செல்ல வேண்டும். அவருடைய நடத்தையைப்பற்றி விசாரனே ஏதேனும் நடத்தும் அலுவலரிடமும் தமது விலாசத்தை கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும். அவருடைய நடத்தையைப்பற்றி நடக்கும் ஒரு விசா ரனேயின்போது அவர் வந்திருக்க வேண்டும் என்று குறிப் பிடும் எல்லா உத்தரவுகளுக்கும் அவர் கீழ்ப்படிய வேண்டும். அவ்வாறு அவர் வரத் தவறில்ை, அவர் இல்லாமலேயே விசாரணை நடத்தப்படலாம். 18. செல்வாக்கைத் தகாத முறையில் பயன்படுத்துதல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் தமது முன்னேற்றத்திற்காக மேலதிகாரி களிடம் ஏதாவது ஒரு அரசியல் செல்வாக்கை அல்லது அயலார் செல்வாக்கைக் கொண்டுவரக்கூடாது அல்லது கொண்டுவர முயற்சிக்கக் கூடாது. இந்த விதியை மீறினால், அவருடைய உத்தியோக உயர்வை நிலேயாக அல்லது கமி ஷனர் நிச்சயிக்கக்கூடிய கால அளவுக்கு நிறுத்திவிடுவதன் மூலம் அல்லது காலக்கிரம சம்பளத் திட்டத்தில் சம்பளத் தைக் குறைப்பதன் மூலம் தண்டனை வழங்கப்படும். விளக்கம் பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர், பஞ்சாயத்து யூனியன் மன்றம் அல்லது பாராளு மன்றம் அல்லது ராஜ்ய சட்டசபையில் தம்முடைய விஷ