பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

287 மாநில அரசாங்கத்தின், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றம் அல்லது நகராட்சி மன்றம் பின்பற்றும் ஒரு கொள்கை அல்லது எடுத்த நடவடிக்கையைப் பற்றி விவாதிக் கவோ, குறைகூறவோ கூடாது. ஆல்ை, இந்த விதியில் கண்டது எதுவும் கீழ்க்கண்ட வற்றை தடை செய்வதாகக் கருதக்கூடாது: (1) பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஒன்றின் (அலுவலர், அல்லது ஊழியர், பஞ்சாயத்து யூனிய்ன் மன்றங்களின்) அலுவலர்கள், ஊழியர்களின் தனிப்பட்ட கூட்டத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அவர்களுடைய சொந்தச் சங்கத்தில் மேற்படி அலுவலர்கள் அல்லது ஊழியர்கள் தனித் தனியாகவோ பொதுவாகவோ பாதிக்கப்பட்டுள்ள விஷயங் கள் பற்றிய விவாதங்களில் பங்கெடுத்தல்; (2) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஏதேனும் ஒரு பொது அல்லது தனிப்பட்ட கூட்டத்தில் மாநில அரசாங்கத்தின், பஞ்சாயத்து யூனியன் மன்றம், பஞ்சாயத்து அல்லது நகராட்சி மன்றத்தின் கொள்கையை அல்லது நடவடிக்கையை ஆதரித்து விளக்கிப் பேசுதல்; மேற்படி கொள்கையை அல்லது நடவடிக்கையைப் பற்றிய தவறன எண்ணங்களேயும் தவருன விளக்கங்களேயும் நீக்குவதற்காகவும், மேலே சொன்ன கொள்கையை வெற்றி கரமாக நிறை வேற்றுவதற்காக அவற்றை ஆதரித்தும் விளக்கியும் பேசலாம். விளக்கம் மாநில அரசாங்கத்தினர்; தங்களுக்குப் பொருத்தமா கவும் அவசியமாகவும் தோன்றுகிறபடி ஏதாவது ஒரு கொள்கை அல்லது நடவடிக்கையை வெளியிட வேண்டும் அல்லது விளக்க வேண்டும் என்று பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலருக்கு அல்லது ஊழியருக்குக் கட்டளேயிடு வதை இந்த விதியில் கண்டது எதுவும் வரையறுப்பதாகவோ குறைப்பதாகவோ கொள்ளக்கூடாது. 33. தனியார் நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்புதல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் கமிஷனரின் எழுத்து மூலமான அனு மதியை முன்னதாகப் பெற்றுக்கொண்டாலன்றி தனியார்