பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/810

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அந்த மசோதா விஷயமாக வரும் ஏதாவது ரு ஆட்சேபனை அல்லது அபிப்பிராயக் குறிப்பைப் பெற்றுக் கொண்டு அதை ஆலோசிக்க வேண்டும். இந்த விதியின் படிக்கான அறிவிப்பு, 3-வது விதியில் சொல்லியுள்ளபடி வெளியிடப்பட வேண்டும். ஆட்சேபனை களே அல்லது அபிப்பிராயக் குறிப்புகளேப் பெற்றுக்கொள் வதற்காக குறிப்பிட்டுள்ள கால அளவு 30 தினங்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. 2. ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றம் செய்யும் ஒரு துணைவிதி அல்லது ரத்து அல்லது திருத்தம் உஆன்டியாக அமுலுக்கு வராது, நீர் வழங்கல், வடிகால் வேலைகள், சம்பந்தப்பட்ட துணைவிதிகள் நீங்கலாக உள்ள துனே விதிகள் விஷயமாய்ச் சம்பந்தப்பட்ட பிரதேச இன்ஸ் ப்ெக்டர் அவற்றை ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பிறகு அவை அமுலுக்கு வரும். 8. ஒரு துணைவிதி அல்லது துனேவிதியின் ரத்து அல்லது திருத்தம் முறைப்படி உறுதிப்படுத்தப்படும்போது அது தமிழில் இல்லாவிட்டால், அதை தமிழில் மொழி பெயர்த்து பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதன் நகல் ஒன்று மேற்படி அலுவல கத்தின் அறிவிப்புப் பலகையிலும், பஞ்சாயத்து யூனியன் மன்றம் கட்டளையிடக் கூடிய இடங்களிலும் ஒட்டி வைக்கப் பட வேண்டும். பஞ்சாயத்து யூனியன் மன்ற அதிகார வரம்பிற்குள் இருக்கும் பகுதிகளிலெல்லாம் தண்டோரா போட்டு அல்ல்து வேறு விதமாக, அந்த நகல் ஒட்டி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதன் அசல் பிரதி பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகத்தில் பார்வைக்காக வைக்கப் ப்ட்டிருக்கிறது என்றும் அறிவிக்க வேண்டும். 4. .ಶಿಣ விதி அல்லது ಶೃಔರ್ಟ್ತ விதியின் ரத்து அல்லது திருத்தம் பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்கள் முடிவடைந்த பின் அமுலுக்கு வரும்.