பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325 42. பொதுச்சாலைகள், சந்தைகள், திருவிழா ஆகியவற்றை வகைப்படுத்துதல் (ப. ச. 178, (2) (42)) விதிகள் 1. பொதுச்சாலைகள், சந்தைகள், திருவிழாக்கள் இவற்றில், எவை பஞ்சாயத்து யூனியன் மன்றங்களைச் சேர்ந்தவை, எவை பஞ்சாயத்தைச் சேர்ந்தவை என்று ஏதாவது ஒரு பஞ்சாயத்து பகுதி விஷயமாய் இன்ஸ்பெக்டர் உத்தரவிடுகையில் : () பொதுச்சாலைகள் விஷயமாக கலெக்டரையும் நெடுஞ்சாலேத் தலைமை என்ஜினியரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்; (ii) சந்தைகள், திருவிழாக்கள் சம்பந்தம்ாகப் பொதுச் சுகாதார இலாகா டைரக்டரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும். - 2. விதி 1-ன்கீழ் வகைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் மன்றமும், பஞ்சாயத்தும், தங்கள் கருத்தைத் தெரிவிப்பதற்காக அதற்கு ஒரு நியாயமான வாய்ப்பை அளிக்க வேண்டும். 3. விதி 1-ன்கீழ் இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டுள்ள வகைப் பிரிவினையை, ஜில்லா அபிவிருத்தி மன்றத்துடன் கலந்து ஆலோசித்து திருத்த, அரசாங்கத்தாருக்கு அதிகாரம் உண்டு. 48. பொருள்கள், சரக்குகளை வாங்குதல் (ப. ச. 178 (2) (19)} விதிகள் 1. வேலேகளே நிறைவேற்றுவதற்கு தேவையானவை தவிர, இதர பொருள்கள், சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கப்படுவது சம்பந்தமாக, பஞ்சாயத்து யூனியன் மன்றம், 400 ரூபாய்க்கு மேற்படாத எந்த அளவுவரை டெண்டர் வரவழைக்க வேண்டியதில்லே என்று நிர்ணயிக்க