பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 Hi. இதர வகைப் பயிற்சி (1) கிராமத் தலைவர் அலுவல் பயிற்சி முகாம்கள் கிராமத் தலைவர்களுக்காக பயிற்சி, அதாவது கிராம அலுவல்களே எடுத்துச் செய்யும் தலைவர்களுக்கு உரிய பயிற்சித் திட்டத்தை 1957 அக்டோபரில் சமுதாய முன்னேற்ற அமைச்சகத்தினர் ஆரம்பித்து வைத்தனர். ஒரு விஷயம் கொடுத்து, அது குறித்த பயிற்சியின் மூலமாக இயற்கையாகவே தலைவர்களின் ஆற்றலே வளர்ப்பதே இத்தத் திட்டத்தின் நோக்கமாகும். கேள்வி-காட்சிச் சாதனங் களைக் கொண்ட பேருரைகள் அடங்கிய இந்தப் பயிற்சித் திட்டத்தின் கால அளவு மூன்று நாட்களாகும். சாதாரண மாக் இப்பயிற்சிக்கு 50 பயிற்சியாளர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராமநிலை ஊழியரைக் கொண்டுள்ள கிராமப் பகுதியிலிருந்து வந்தவர்களாயிருப்பர். இந்தப் பயிற்சியைத் திறம்பட அளிப்பதற்காக சமுதாய முன்னேற்றத் திட்டத்தின் பல்வேறு விஷயங்கள் கீழ்க் கண்ட தொகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன : (a) விவசாயம், கால்நடை வளர்ச்சி, சிறிய பாசனம். (b) பஞ்சாயத்துகள், கூட்டுறவு, கிராமத் தொடர்பு. (c) கிராமக் கைத்தொழில்கள், கிராமக் குடியிருப்பு வசதி, (d) கல்வி, சமூகக் கல்வி, பொதுச் சுகாதாரம், துப்புரவு. (e) மாதர் நலத்திட்டம். விவசாயம், கால்நடை வளர்ச்சி, சிறிய பாசனம் இவற்றில் இப்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கிராம நிலே ஊழியர்களோடு கலந்தாலோசித்து, வட்டார அபிவிருத்தி அதிகாரிகள், கிராமத் தலைவர்களே முதலாவது தேர்ந்தெடுப்பார்கள். முடிவாகப் பஞ்சாயத்துகளோடும் வட்டார சிப்பந்தியினரோடும் கலந்தாலோசித்து முடிவில் ஒரு பட்டியலேத் தயாரிப்பார். இந்த முகாமில் சம்பந்தப்பட்ட இலாகாக்களின் தொழில் காட்சியும் இருக்கும். இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்னவெனில், கிராம மக்களுக்கு திட்டத்தின் காரியாம்சங்களே விளக்கமாக எடுத்துச் சொல் வதேயாகும். இந்தக் கண்காட்சி, சிறந்த விவசாய சாதனங் களேப் பயன்படுத்துவது, கிருமி நாசினிகள், பூச்சி