பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/863

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

377 (2) அரசாங்கச் சார்பற்ற அங்கத்தினர்கள், அவர்கள் எந்தப் பிரயாணத்திற்காக பிரயாணப்படி கோருகிறர்களோ, அந்தப் பிரயாணம் முடிந்த தேதியிலிருந்து ஆறு மாதங் களுக்குள் பிரயாணப்படி, தினசரிபடி ஆகியவற்றிற்கான கோரிக்கையைக் கொடுக்க வேண்டும். (3) அரசாங்கச் சார்புள்ள அங்கத்தினர்கள், தாங்கள் சம்பளம் பெறும் ஆதாரத்திலிருந்து வழக்கமான முறையில், பிரயாணப் படியையும் தினசரி படியையும் பெற்றுக்கொள்ள வேண்டும். (4) பிரயாணப்படிக்காக அ ர ச | ங் க த் தாரு க் கு க் கோரிக்கை செய்துகொள்கையில், சம்பந்தப்பட்ட அங்கத் தினர் அந்தக்கால அளவில், வேறு எந்த ஆதாரத்திலி ருந்தும் பிரயாணப் படி அல்லது தினசரி படி பெறவில்லே யென்பதற்கான சான்றிதழை மேற்படி நபர் அனுப்ப வேண்டும். 5. (1) அரசாங்க சார்பற்ற அங்கத்தினர்கள் பிரயானப் படி, தினசரி படிகளுக்காக செய்து கொள்ளும் கோரிக்கை கள், மாவட்டக் கலெக்டர் அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற இதர ஒரு நபரால் பரிசீலனே செய்யப்பட்டு மேற் கையொப்பமிடப்பட்டவுடன், கோரிக்கையில் கண்ட தொகை யைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட அங்கத்தினருக்கு அனுப்பப்படவேண்டும். (2) மாவட்டக் கலெக்டர் அல்லது இது குறித்து அதி காரம் அளித்துள்ள ஒரு நபர்,ராஜ்ய சட்டசபை அங்கத்தினர் களின் பிரயாணப் படி கோரிக்கைகளே மேற் கையொப்பம் இடுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அங்கத்தினர்களுக்கு அதே கால அளவில் அதே பிரயாணத்திற்காக பிரயாணப்படி கொடுக்கப்பட்டுள்ளதா என சந்தர்ப்பத்திற்கேற்ப, ராஜ்ய சட்ட சபை இலாகாவினரிடமிருந்தும் மேல்சபை இலாகாவி னரிடமிருந்தும் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்; மேலும், அவர்கள் அத்தகைய பிரயாணப் படி எதுவும் கொடுக்கப்படவில்லை என்று நிச்சயம் தெரிந்துகொண்ட பின்னர், அதற்கான சான்றிதழ் ஒன்றை அனுப்ப வேண்டும். [G. O. No. 561, L.A. 26–3–1960]