பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/905

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வழக்கு: 11 சென்னை உயர் நீதிமன்றம். கனம் பிரதம நீதிபதி ராமச்சந்திர அய்யர் அவர்கள்; கனம் நீதிபதி ராமகிருஷ்ணன் அவர்கள். மனுதாரர். சிறுவயலூர் பஞ்சாயத்து தலைவர்: ஜெயராமன். எதிர் மனுதாரர்: சென்னை அரசாங்கத்தின் சார்பாக ஸ்தல ஸ்தாபன, கிராம அபிவிருத்தி இலாகா அடிஷனல் காரியதரிசி, விஷயம் பஞ்சாயத்துச் சட்டப் பிரிவு 47 மற்றும் 178-ன் கீழ், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கூடும் இடத்தை மாற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அதி காரம் உண்டா? வழக்கின் சுருக்கம் பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் அரசாங்கம் தனக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கொண்டு, 1961-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், ஆலத்துார் பகுதியை, பஞ்சாயத்து யூனியன் வட்டாரமாக அறிவிப்புச் செய்தனர். ம்ேற்படி ஆலத்துனர் பஞ்சாயத்து யூனியனில் 34 பஞ்சாயத்து கள் இருக்கின்றன. அவற்றில் கொளக்கானத்தம் ஒரு பஞ்சாயத்து, மேற்படி கொளக்கானத்தம் பஞ்சாயத்து தலேவர் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மனுக தேர்ந்தெடுக்கப் பட்டார். அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்ட காலத்தில், ஆலத்துர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், ஆலத்துTரி லேயே இருக்கும் என்பதாக உத்தரவு பிறப்பித்திருந்தனர். ஆல்ை, கொளக்கானத்தம் பஞ்சாயத்து தலைவர், மேற்படி பஞ்சாயத்து யூனியன் சேர்மகை ஆனபின்னர், தம்முடைய செல்வாக்கையும் அங்கத்தினர்களின் மெஜாரிட்டி ஆதரவை யும் பயன்படுத்தி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கொளக்கானத்தத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஜில்லா கலெக்டர், முதலில் இந்தத் தீர்மானத்துக்கு அனுமதி வழங்காமல், மறு பரிசீலனை செய்யும்படி யூனியன் கவுன்சிலே கேட்டுக்