பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/923

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வழக்கு: 18 ச்ென் ஆன் உயர் நீதிமன்றம் கனம் நீதி. நீதிபதி: வெங்கட்ராமன் அவர்கள். .. . ... ராயணசாமி, டி. கே. ரீநிவாசன், மற்ருெருவர். விஷயம் பஞ்சாயத்துச் சட்டம் 25 (2) (b) - 172இன்சால்வெண்ட் என்ற நிலையிலிருந்து விடுவிக்கப் பட்டவர் என்று யாரைச் சொல்ல முடியும்? மாகாண இன்சால்வென்ஸி சட்டம் 48-ம் பிரிவின்கீழ், முதலில் இன்சால்வெண்ட் என்று தீர்மானிக்கப்பட் ட்தை ரத்து செய்துவிட்டால், பஞ்சாயத்துஅங்கத் தினர் ஆவதற்கு தகுதி வந்துவிடுமா? வழக்கின் சுருக்கம் முதல் எதிர்மனுதாரர், (டி. கே. ரீநிவாசன்)1963 மார்ச் மாதம் இன்சால்வெண்ட் எ ன் று அறிவிக்கப்பட்டார். இன்சால்வெண்ட் என்ற நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள மனுப்போடுவதற்கு அவருக்கு ஆறு மாதம் கெடு தரப்பட்டது. அந்த கால வரம்புக்குள் மனுப்போட தவறியதால் 1964, ஜூன் மாதம், மாகாண இன்சால்வென்ஸி சட்டம் 43-ம் பிரிவின்கீழ், அவர் இன்சால்வெண்ட் என்று முதலில் அறிவிக் கப்பட்டது ரத்து ஆயிற்று. அவர் 1965, மார்ச் இறுதியில் கொண்டாம் பாளேயம் பஞ்சாயத்து அங்கத்தினராக தேர்ந் தெடுக்கப்பட்டார். மனுதாரரும் அங்கத்தினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். மனுதாரர். 1965, ஏப்ரல் மாதம் ஜில்லா முன்சிப் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், முதல் எதிர் மனுதாரர் இன்சால்வெண்ட் என்றும் அதனுல் தேர்தலுக்கு நிற்க அருகதை அற்றவர் என்றும் குறிப்பிட்டார். மேலும், அவர் பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்கு போட்டியிடு வதற்கு தடை விதிக்கும்படியும் ஒரு இடைக்கால மனுப் போட்டார். முதல் எதிர்மனுதாரர் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. எனவே, மனு தாரர் (நாராயணசாமி) போட்டி இல்லாமல் பஞ்சாயத்து தலேவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.