பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/924

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 முதல் எதிர்மனுதாரர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார் அதில் மனுதாரரின் தேர்தலே ரத்து செய்யும்படி கோரினர். அதில், தாம், பஞ்சாயத்துச் சட்டம் 24, (2) (b) பிரிவின்கீழ் அருகதை இழக்கவில்லே என்றும் இன்சால்வெண்ட் என்ற நிலே ரத்தான பிறகு, தம்மை இன்சால்வெண்ட் என்று. சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார். 1965, ஏப்ரலில், நடந்த தேர்தலுக்கு, சிவில் கோர்ட் இடைக்கால தடை விதிப்பதை பஞ்சாயத்துச் சட்டம் 172-ம் பிரிவு அறவே தடுக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினர். பஞ்சாயத்துச் சட்டம் 28. (2)(b) பிரிவின்கீழ் அவருக்கு எதிராக மனுதாரர் தாக்கல் செய்த மனு பைசலாகும் வரை பஞ்சாயத்து அங்கத் தினராக செயல்பட உரிமை உண்டு என்றும் அவர் குறிப் பிட்டார். இருவருடைய மனுக்களேயும் முன்சீப் ஒன்ருக விசாரித்தார். அவர், முதல் எதிர்மனுதாரரின் வாதங்களே ஏற்றுக் கொண்டு, அவர் மீது விதிக்கப்பட்ட இடைக்கால் தடையை நீக்கினர். மனுதாரர். பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்தார். பாதிக்கப்பட்ட நாராயணசாமி இரண்டு ரிவிஷன் மனுக்கள் தாக்கல் செய்துள்ளார். திர்ப்பின் சாரம் மனுதாரரின் சார்பில் பஞ்சாயத்துச் சட்டம் 25 (2) (b) பிரிவுக்கு பொருள் கூறும்போது, மாகாண இன்சால் வென்ஸி சட்டம் 73-வது பிரிவை கவனிக்க வேண்டும் என்று வாதாடப்பட்டது. எதிர்மனுதாரர், மாகாண இன்சால்வென்ஸி சட்டம் 73-வது பிரிவின்கீழ் சந்தர்ப்ப வசத்தால் இன்ஸ்ால்வெண்ட் ஆனதாயும் ஒழுக்கத் தவறு காரணமாக அப்படி ஆகவில்லே என்றும் இன்சால் வென்ஸி கோர்ட்டாரிடமிருந்து சர்டிபிகேட் பெற்று, இன்சால் வெண்ட் என்ற நிலேயிலிருந்து விடுபடாததால் அவர் பஞ்சாயத்து அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்படும் அரு கதையை இழந்து விட்டதாகவும் வாதாடப்பட்டது. அதே சட்டம் 73. (2) பிரிவை எடுத்துக் கொண்டால், ஒருவர் இன்சால்வெண்ட் என்ற நிலையிலிருந்து 35-ம் பிரிவின்படி கீழ்க்கண்ட காரணங்களுக்காக விடுவிக்கப் பட்டிருக்க வேண்டும். (1) அவர் இன்சால் வெண்ட் என்று அறிவிக் கப்பட்டிருக்க வேண்டியதே இல்லே. (2) கடன்கள் பூரா வாகக் கொடுபட்டுவிட்டன. (3) மேலே சொன்னபடி சர்டி