146 □
டாக்டர் தாம் மட்டிலும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, அதன் புகைச் சுருள்கள் காற்றில் உலைந்து உலைந்து கலைவதைச் சுவாரசியத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார். பிறது திடீரென்று சங்கரிடம் திரும்பிப் பேசத்தொடங்கினார்.
"சங்கர்,கைலாச முதலியார் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? காரணம் என்ன? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?"
டாக்டரின் கேள்வியைக் கேட்டதும் சங்கரின் முகம் உணர்ச்சியினால் கன்றிச் சிவந்தது.
"அவரா தற்கொலை செய்தார்? இல்லை, டாக்டர்! இந்த அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கைதான் அவர் உயிரைக் குடித்து விட்டது!" என்று ஆவேசத்தோடு பதில் கூறினான் சங்கர்.
டாக்டர் உள்ளிழுத்த புகையை வெளிவிட மறந்தவராய் "என்னது?"என்றுவியப்புடன் கேட்டார்.
சங்கர் நிமிர்ந்துஉட்கார்ந்து பேசமுனைந்தான்.
"ஆமாம், டாக்டர் உண்மையைச் சொல்லப் போனால், அதுதான் அடிப்படைக் காரணம். சர்க்காரின் ஜவுளிக் கொள்கையால் நெசவாளர் சமூகமே சீர்குலைந்து விட்டது. சர்க்காரின் போக்கால் கைத்தறி ஜவுளிகளுக்கு ஏற்றுமதியும் இல்லை; விற்பனையும் இல்லை; இதனால் வியாபாரம் மந்தம்; தொழில் முடக்கம். பின் ஏழை நெசவாளிகளும் அவர்களை நம்பி வாழும் சிறு வியாபாரிகளும், ஏன் ஸார் சீரழிய மாட்டார்கள்? அந்தச் கீரழிவைச் சுட்டிக் காட்டும் களபலிதான், கைலாச முதலியாரின் மரணம்!"
சங்கர் உணர்ச்சி வசப்பட்டவனாய் சர்க்காரின் ஜவுளிக் கொள்கையின் இலாப நஷ்டங்களையெல்லாம் எடுத்துக் கூற முனைந்தான்.அமெரிக்கப் பஞ்சை அதிக விலை கொடுத்து வாங்குவதால் ஏற்படும் பாதக