பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


விளைவுகளைச் சுட்டிக்காட்டினான். ஏற்றுமதிக்குவிதித்த தடையால் ஏற்பட்டஜவுளித்தேக்கத்தை எடுத்துரைத்தான்; கைத்தறித் தொழிலாளர்கள் நசித்து நசித்து புழுவாய்ச் செத்து மடியும் பல செய்திகளைக் குறிப்பிட்டும் பேசினான்.

சங்கர் சொல்வதையெல்லாம் ஆர்வத்தோடும்கவனத் தோடும் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் ஏதோ ஞாபகம் வந்தவராக இடைமறித்துப் பேசினார்.

"சங்கர் நீங்கள் அன்னிக்குக் கொடுத்தீர்களே ஒரு புத்தகம். அதைப் படித்த பின்புதான் அன்னியர் மூலதனத்தால் நமது தொழில் வளர்ச்சி எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்ற விஷயமே எனக்குப் புரிந்தது."

"ஆமாம் டாக்டர் "வெள்ளையனே வெளியே போ" என்று கோஷித்த கோஷத்தின் வேலை இன்னும் தீரவில்லை. இந்த சர்க்கார் வெள்ளையனின் சொத்தைப் பாதுகாத்துக் கொடுப்பதில்தான் கவனமாயிருக்கிறதே ஒழிய இந்த நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாத்துக் கொடுக்க முனையவில்லை. மனித உயிரின் விலை இந்த நாட்டில் அத்தனை மலிவாகப் போய் விட்டது பாருங்கள். நித்த நித்தம் எத்தனை பட்டினிச் சாவுகள்! இதுவா சுதந்திரம்?"என்றுவருத்தமும் ஆக்ரோஷமும்கலந்தகுரலில் பேசினான் சங்கர்.

டாக்டர் சங்கருக்கு உடனே பதில் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆட்டிவிட்டு சிறிது நேரம் மௌனமாயிருந்தார். பிறகு "வாஸ் தவம்தான் சங்கர்" என்று ஆமோதித்தவராய் மேலே பேச முனைந்தார்.

"பாருங்கள், இங்கே ஆஸ்பத்திரிக்கு வருகிறநோயாளி சுளைப் பார்த்தால் ஒரே பரிதாபமாயிருக்கிறது. இங்கு வருகிறவர்கள் பெரும்பாலும் நோயாளிகளே அல்ல. சத்தான உணவோ, வேளா வேளைக்குச் சாப்பாடோ, போதுமான ஓய்வோ இல்லாமல் உடல் நலம் கெட்டு வருகிறவர்கள் தான் அதிகம். இந்த ஜனங்களுக்கெல்லாம்