□ 169
அனுமதிக்க மாட்டாராம். மீண்டும் மணிக்கு ஏதேனும் அதிர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அவர் பயப்படுகிறார். இத்தனை நாள் பொறுத்திருந்தவள் இன்னம் இரண்டு நாளைக்குப் பொறுத்திருக்கக் கூடாதா?" என்று கூறியவாறே முகத்தைத் துடைத்து கொண்டான் சங்கர்.
கமலாவுக்குத் தோன்றிய புது உற்சாகத்தால், அவள் மேலும் பேச முனைந்தாள்.
"நீ வருகிற வரையிலும், எனக்கு ஒண்ணுமே ஓடலை, ஏன் அண்ணா , வர்ரதுக்கு இவ்வளவு நேரம்?"
"உனக்கு நல்ல செய்தி கொண்டு வரணும்கிறதுக்காக, மணிக்கிக் காய்ச்சல் இறங்குகிற வரையிலும் ஆஸ்பத்திரியிலேதான் இருந்தேன். அப்புறம் வர்ர வழியிலே, நம்ம ஊருத் தறிகாரங்க எல்லாம் என்ளை நிறுத்திட்டாங்க. மணி வீட்டிலே நடந்த விஷயம் அவங்க கண்ணைத் திறந்து விட்டிருக்கு. சங்கம் வச்சிப் போராடினாத்தான் விமோசனம் என்ற எண்ணம் இப்போதுதான் அவங்களுக்குப் புரிய ஆரம்பிச்சிருக்கு. அதுதான் வர நேரம் ஆயிட்டுது" என்று விளக்கிச் சொன்னான் சங்கர்.
"அப்போ, இனிமேல் நம்ம அப்பா முன்னே மாதிரி கொள்ளையடிக்க முடியாதுன்னு சொல்லு!" என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் கமலா.
இதற்குள் தர்மாம்பாள் உள்ளேயிருந்து கூப்பிடும் சப்தம் கேட்டது.
"ரெண்டு பேரும் என்னத்தைத்தான் பேசிக்கிட்டு இருக்கிய? வாங்க சாப்பிட வயிறு பசிக்கலையா?" என் கூப்பிட்டாள் தர்மாம்பாள்.
சங்கரும், கமலாவும் வீட்டுக்குள் சென்று சாப்பிட உட்கார்ந்தார்கள்.
தர்மாம்பாள் இருவருக்கும் பரிமாறிக்கொண்டே