பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


 டாக்டர்!" என்று கூறியவாறே அவரைப் பரிதாபகரமாகப் பார்த்தான் மணி.

"என்ன வேண்டும்?" என்று அன்புடன் கேட்டார் டாக்டர்.

"என் குடும்பத்துக்கு நேர்ந்தகதியைப் பார்த்தீர்களா,டாக்டர்?" என்று கண் கலங்கினான் மணி.

"மணி. தைரியமாயிருங்கள். வீணாய்க் கவலைப்பட்டு உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தைரியம் வேண்டும். தைரியம் இல்லாத காரணத்தால்தான் நீங்கள் மண்டையிலடிபட்டு இந்தக் கோலத்துக்கு ஆளாகிவிட்டீர்கள்."

டாக்டர் கூறியதற்கு இன்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் திகைத்தான் மணி.

"டாக்டர், நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருங்கள். எனக்குப் பயமாயிருக்கு" என்றான் மணி.

"இங்கேதானே இருக்கிறேன். இப்போதுதானே சொன்னேன், தைரியமாயிருங்கள் என்று" என்று செல்லக் கண்டனத்தோடு கூறினார் டாக்டர்.

“இருக்கேன் டாக்டர்' என்று உள்ளுக்குள் அடங்கிய குரலில் பதில் தெரிவித்தான் மணி. பிறகு சிறிது நேரம் கழித்து, "எனக்கு எல்லாரையும் பார்க்கணும் போலே இருக்கு" என்று ஆசையோடு தெரிவித்தான்.

"எல்லாரையும் வரச்சொல்கிறேன். போதுமா?"

"டாக்டர் "

'பேசப் பேசக் களைப்புத்தான் தோணும். கண்ணை மூடிக்கொண்டு படுத்திருங்கள்."

"சரி, டாக்டர்."