பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


மனத்தால் ஆசீர்வதித்தவராக உள்ளே திரும்பி வந்தார். அவர். வந்த போது மணி, கமலா கொண்டு வந்திருந்த திராகூைப் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாயிலிட்டுச் சுவைத்துக் கொண்டிருந்தான்.

அவனது நாக்கில் தட்டுப்படும் இனிமையைப் போலவே அவன் மனத்திலும் சங்கர், கமலா, டாக்டர், கோனார் முதலியோரின் அன்பையும் பரிவையும் பற்றிய எண்ணம் தோன்றி இனித்துக் கொண்டிருந்தது, எல்லாவற்றையும்விட, கமலா தன்மீது கொண்டுள்ள மாறாத அன்பைக்கண்டு அவனுக்குத்தன் நம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டன. எனினும் மறுகணமே அவனுக்குக் கமலாவை மணந்து கொள்ள இயலுமா என்ற சந்தேகமும், தனது குடும்பத்துக்கு நேர்ந்த அவக்கேடும், தனது தைரியமற்ற தன்மையும், தன்னை எதிர்நோக்கி நிற்கும் பொறுப்புணர்ச்சிகளைப் பற்றிய பயப்பிராந்தியும், உள்ளத்திலே குடி புகுந்து, அந்த இனிப்பைப் புளிக்க வைத்தன.


18

மணிக்கு உடம்பு குணமாகிவிட்டது.

தலையிலுள்ள கட்டை அவிழ்த்து நாலு தினங்கள் ஆகிவிட்டன. அவன் எழுந்து நடமாடத் தொடங்கிவிட்டான். எனினும் டாக்டர் நடராஜன் அவனது குடும்ப நிலைமையை உத்தேசித்தும், மணியின் மனோநிலையைக் கருதியும் அவனை மேலும் சில தினங்கள் ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொண்டார். எனவே அவன் ஆஸ்பத்திரியில்தான் இருந்தான். தினம்தினம் சங்கர் வந்து மணியைச் சந்தித்துப் போனான். கமலாவும் அடிக்கடி வந்து சென்றாள்.மணியின் தாய் தங்கம்மாளும் இரண்டு தடவைகளுக்குமேல் வந்து மகனைப்பார்த்துவிட்டுச்சென்றாள். இருளப்பக்கோனார் மட்டும் பகலில் மூன்று வேளைகளிலும் வந்து மணிக்கு