பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194


"அதுமுடிகிறகாரியமா,கமலா?"

"ஏன் முடியாது? என் தந்தையையே நான் புறக்கணிக்கத் துணிந்தால்?"

அவளுடைய பேச்சில் தொனித்த உறுதியைக் கண்டு மணி மலைத்தான்; அவளுக்குள்ள உறுதிகூடத் தனக்கு இருக்குமா என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கக் கூடத் தயங்கினான்.

"எனக்காக நீ உன் சொத்துச்சுகத்தையொல்லாம்விட்டு விடுவதா?" கேள்வியைக் கேட்ட பிறகுதான் அதை ஏன் கேட்டோம் என்றிருந்தது. அவனுக்கு

"அத்தான் எனக்குச் சொத்துச் சுகம் பெரிதல்ல; என் லட்சியம்தான் பெரிது. ஆதை அடைவதற்காக நான் எதையும் விட்டு விடுவேன். அண்ணா கற்றுக் கொடுத்த பாடம் அது!"

கமலாவின் தைரிய மொழியால்தான் மணியின் மனம் ஆறுதல் அடைந்தது. அவன் தனது இதயத்தில் முட்டிக்கொண்டிருந்த அன்பையெல்லாம்வாரிப்பொழிந்தவனாய், "கமலா!" என்று கம்மியடங்கிய குரலில் அவள் கையைப் பிடித்துக்கண்களில் ஒற்றிக்கொண்டான்,

செருப்புச் சத்தம் கேட்ட கமலா "யாரோ வர்ராங்க" என்று கூறியவளாய் கைக்களை விசுக்கென்று பிடுங்கிக் கொண்டு இடத்தை , விட்டு எழுந்தாள்; டாக்டர்தான் வந்தார். கமலா டாக்டருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, விடைபெற்றுச் சென்றாள்.

கமலா வந்து சென்றதில் புதிய உற்சாகமும், 'அவள் கூறிய தைரியத்தால் நம்பிக்கையுணர்வும், கூறியபடி அவள் நடக்க முடிமா என்ற சந்தேகத்தால் சிறு கலக்கமும் மணியின் மனத்தில் புகுந்து ஊடாடின,

ஆஸ்பத்திரிக் கடிகாரம் மணி பன்னிரண்டு அடித்தது.