பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206


"அதை எப்படி மறப்பது? எதை மறக்கவேண்டும் என்று நினைக்கிறேனோ அதுதானே மேலும் மேலும் விரிந்து வளர்ந்து பயமுறுத்துகிறது...!

"நான் யார்? என் ஆத்மா யார்? நான் என்று தனிப்பட்ட தன்மை ஒன்று உண்டா? இருத்தால் அதை மட்டும் சுமந்து திரிய முடியாதா? அல்லது அதை மட்டும் என்னால் கழற்றி எறிய முடியாதா? ஆனால் 'நான்' என்று நான் கருதுவது, என் ஆத்மா என்று உரிமை கொண்டாடிக் கொள்வது முழுவதிலும், என் சென்றகால வாழ்வின் நினைவுச் சித்திரங்கள் தானே தெரிகின்றன. அப்படியானால் அந்த வாழ்வும் நினைவும் உருவாக்கிய உருவமற்ற மனப்பிராந்திதான் என் ஆத்மாவா? சங்கர் சொன்னானே, அந்த பாதிரி நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு உருவான சாசனச் செப்பேடுதானா என் மனம்? எனக்கென்று தனி மனம் கிடையாதா? தனி ஆத்மா கிடையாதா? என் விருப்பப்படி என் மனச் சித்திரங்களைத் தீட்டவோ அழிக்கவோ முடியாதா? என் மனம் எனக்குக் கட்டுப்பட்டதில்லையா? அப்படியானால் என்னை ஆட்டிப் படைத்து அலைக்கழிக்கும் பூத பயங்கரம் தானா என் ஆத்மா...?"

ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆராய்ச்சி செய்தும், வேதாந்திகள் கையில் சிக்காது என்றென்றும் விடியாத கேள்வியாகக் கொக்கியிட்டுக் குறுக்கே நிற்கும் அந்த ஆன்ம விசாரம் மணிக்கு மட்டும் அவ்வளவுலகுவில் புரிந்து விடுமோ கஞ்சாபோதையைப் போல் மனக்கிறக்கம்தந்த அந்த ஆன்ம விசாரணைக்குள் தீக்கோழிபோல் தலையைப் புதைத்துக் கொண்டான் மணி எனினும் இத்தனை கேள்விகளுக்கிடையிலும் அவன் 'நான் ஏன் சிந்திக்கிறேன்? ஏன் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை?' என்ற கேள்வியை மட்டும் எண்ணவும் இல்லை; எழுப்பவும் இல்லை.

குணதிசைக்கோடியில் பாலசூரியனின் சிவந்த முகம் சூடேறி, நீலம் பாரித்த வெள்ளிய நெருப்புக் கோளமாக