பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


மணி காணாமல் போனதிலிருந்து கமலாவிடம் உற்சாகமும் உவகையும் குடியோடிப் போய்விட்டன. தனிமையிலும், சமயங்களில் தன் தாயின் முன்னிலையிலும், சங்கரின் முன்னிலையிலும் அவள் ஆற்றாமை தாங்க மாட்டாமல் கண்ணீர் பெருக்கி விடுவாள்; படிப்பிலும் அவள் மனம் ஈடுபடவில்லை. எந்நேரம் பார்த்தாலும் பித்துப் பிடித்தவள் மாதிரி அவள் தோற்றமளித்தாள். "மணியை எப்படியாவது தேடிக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று சங்கர் அடிக்கடி கூறும் ஆதரவு மொழி. ஒன்றே. அவள் உயிரை தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது போலிருந்தது.

கமலாவைப்பற்றிநினைத்ததும், சங்கருக்கு அவள் மீது பரிதாபவுனர்ச்சி பிறந்தது. அவள் நாளுக்கு நாள் ஒளியிழந்து களையிழந்து மெலிந்து வருவதை எண்ணி அவன் பெருமூச்சுவிட்டான். அவளுக்காகவேனும் மணியை எப்படியாவது விரைவில் தேடிப் பிடிக்கவேண்டும் என்று அவன் உள்ளம் எண்ணியது. ஆனால், அதே சமயத்தில் அவன் மனத்தில் அந்த சோவியத் வீரன் ஐவனோவின் லட்சியமும் கமலாவின் நிலைமையும் மாறித் தோற்றமளித்தன.

'கமலாவுக்கு மணியின் காதல் ஒன்றுதான் பிரதானமா? அவள் இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்பட்டிருப்பாள் என்று நான் எண்ணவேயில்லையே. அவளை நான் ஒரு லட்சிய வேட்கை கொண்ட பெண்ணாக ஆக்க வேண்டும் என்றல்லவா திட்டமிட்டேன்! என் ஆசையையெல்லாம் அவள் பாழாக்கி விடுவாளா? அவள் என்ன இவ்வளவு உறுதியற்றவளாக இருக்கிறாள்!...

'காதல்தானா பெரிது? அதுவா. மனித லட்சியம்? அப்படியானால், காதல் கைகூடி விட்ட பிறகு, வாழ்க்கை லட்சிய குன்யமாகவா போய் விடும்? வாழ்வின் கடைசி