பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234


கேட்டுக்கிட்டு சங்கம் கிங்கம்னு வச்சிக் கெட்டுப் போகக் கூடாதாம். எல்லாம் நம்ம மைனர்வாள் துரண்டு தல்லெதான், இத்தனையும் பேசியிருக்கார். அப்புறம் கேளு சங்கரா. கஞ்சித் தொட்டி வைக்கணும்னு கேக்கிறதே தப்பாம். உழைத்துச் சாப்பிடும் மானஸ்தர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் சதி வேலையாம், அது! எப்படி இருக்கு?

சங்கருக்குநெஞ்சுக்குள் கோபம்குமுறியெழுந்தது.

"பிச்சைக்காரர்களா? பிழைப்புக்கு வேலை கொடுக்கவும் இவர்களுக்கு விதியில்லை; பசித்த மக்களுக்குச் சோறு கொடுக்கவும் துப்பு இல்லை. யார் பிச்சைக்காரர்கள்?" என்று ஆத்திரத்தோடு பேசினான் சங்கர்.

"அதுதான் தம்பி, நாமும் பெரிய தலைவரை யெல்லாம் வரவழைச்சி, இவங்களுக்குச் சுடச் சுடப் பதில் கொடுக்கணும், அப்பதான். இவங்க சரியா வருவாங்க!” என்று தமது ஆசையை வெளியிட்டுக் கொண்டார் வடிவேலு முதலியார்.

"பெரிய தலைவர் வந்தால் மட்டும்போதுமா? முதலில் உங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்துங்கள். பிறகு உங்கள் உறுதியும் ஒற்றுமையுமே உங்களுக்குத் தலைமை தாங்கும்" என்றான் சங்கர். நெசவாளிகளோடு சிறிது நேரம் அளவளாவி விட்டு, வீட்டுக்குத் திரும்பினான் சங்கர்; வடிவேலு முதலியார் சங்கரை மங்கள பவனத்தின் கேட்வரையிலும் சென்று வழியனுப்பி விட்டுத் திரும்பினார்.

சங்கர் வீட்டுக்குள் நுழையும்போது மணி பத்தரை ஆகிவிட்டது. முன் கட்டிலுள்ள தந்தையின் அறையில் வெளிச்சமில்லாததைக் கண்டு, தந்தை வீட்டிலில்லை என்பதை ஊகித்தறிந்து கொண்டான். உள்ளே சென்றதும், சங்கரின் தாய் அவனைவரவேற்றாள்.

"வாடாப்பாசங்கர்.காலையிலேயே வர்ரவனா நீ?"

"வரமுடியலேம்மா."