□ 235
"நீ பாட்டுக்கு வெளியே தங்கிட்டேன்னா, உங்க அப்பாவுக்கு என்னாலே பதில் சொல்லிமாளலை. எல்லாம் நீ குடுக்கிற இளக்காரம்தான்னு என்னைக் கோவிச்சிக்கிடுதாங்க" என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள் தர்மாம்பாள்.
"சரி, அப்பா எங்கே?"
"அப்பாவா? அவுக நேத்தே எஸ்டேட்டுக்குப் போனாக. இன்னம் வரலெ"
சங்கர் தன் தாயின் வெகுளித் தன்மையை எண்ணி, மெல்லச் சிரித்துக் கொண்டான்.
"ஏம்மா? அப்பாதான் வீட்டிலேயே இல்லியே. அப்புறம் அப்பா கோவிச்சிக்கிட்டாகன்னு பொய்தானே சொன்னே?"
தர்மாம்பாளின் முகத்தில் அசடு வழிந்தது; அவள் இன்னது சொல்வதெனத் தெரியாமல் பல்லைக் காட்டினாள்.
"பின்ன என்னடாப்பா? நீ இப்படி ராப்பகலா கண்முழிச்சி, கண்ட இடத்திலே சாப்பிட்டா, உடம்பு என்னத்துக்கு ஆகும் ? பெத்தவளுக்குக்கவலை இருக்காதா?" என்று கூறிச் சமாளித்தாள்.
"சரியம்மா, வா சாப்பிடலாம்" என்று கூறிக் - கொண்டே உள்ளே நடந்தான் சங்கர்,
சாப்பிட உட்காரும்போது சங்கர் தாயைப்பார்த்துக் கேட்டான்.
"ஏம்மா,கமலா தூங்கிட்டாளா?"
"இத்தனை நேரமும் உன்னைத்தான் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தா இப்போதான் ஒரு வாய்ச் சோத்தைத் தின்னுட்டுப் படுத்துத் தூங்கினா நீயும் இருந்தா, அவள் ரெண்டு உருண்டைச் சாதமாவது கூடச்சாப்பிடுவா. இப்போ எனக்கு அவ கவலையே