பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

237


எங்கே ஓடினாலும் இந்த உலகத்தை விட்டு ஓடிவிட முடியுமா?

ஆனால், வடிவேலு முதலியார்! அவர் எவ்வளவு உற்சாகத்தோடும் உறுதியோடு இருக்கிறார் சங்கத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது!

'மணி காணாமல் போனதோடு, தங்கம் அத்தைக்குச் சொத்துச்சுகங்களும் போய்விட்டன. இருளப்பக் கோனார் மட்டும் அருகிலிருந்து ஆறுதல் சொல்வாவிட்டால், அவளும் தன் கணவன் வழியையே பின்பற்றியிருப்பாள்!

அவளுக்கு மட்டும்தானா. துன்பங்கள்! நாடெங்கிலும் மக்கள் வறுமையாலும் பஞ்சத்தாலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள்! இந்த மக்களுக்கெல்லாம் என்று தான் விமோசனம் ஏற்படப் போகிறதோ?

கமலா, அவளும் நாளுக்கு நாள் மெலிந்து தான் வருகிறாள், மணியின் பிரிவு அவள் உற்சாகத்தையும் உடலையுமே. பாதித்து விட்டது.

ஆனால் சுமலாவுக்கு என்ன கவலை? அவள் என்ன தங்கம் அத்தையைப் போல் சொத்துச் சுகத்தை இழந்து தவிக்கிறாளா? சோற்றுக்கில்லாமல் தலிக்கிறாளா? அவளுக்குள்ள கவலையெல்லாம் தன் காதல் கைகூட வில்லையே என்பது தான்.

ஒரு பக்கத்தில் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள்?வாழவழியின்றித் தற்கொலையைச் சரண் புகுகின்றார்கள்; வடிவேலு முதலியார் போன்ற நெசவாளிகள் கூட, உரிமைக்காகப் போராட முன் வந்து விட்டார்கள்; ஆனால், கமலாவோ இதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் காதலை எண்ணி உருகிக் கொண்டிருக்கிறாள். அதிலும் அவள் காதலைக்கூடப்