பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255


மணி டீயைச் சாப்பிட்டு முடித்தான்.

ராஜு தமது பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டியவாறு, "சிகரெட்வேணுமா?” என்று அருமையோடு கேட்டார்.

"இல்லை சார், எனக்குப்பழக்கமில்லை

"இப்போது உடம்புக்குத்தேவலையா?"

"ம்" என்று முனகினான் மணி

"தம்பி, ஊரிலே உங்களுக்கு என்ன தொழில்

"ஊரில் நான் தொழில் செய்யலை; காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன்."

"காலேஜிலா? அப்போ, உங்கள் குடும்பம் கொஞ்சம் வசதியான குடும்பமென்று சொல்லுங்கள்..

'அப்படித்தான் இருந்தது."

"சரிபடித்துக் கொண்டிருக்கும்போதே வேலை தேடி வரக் காரணம்?"

அவரிடம் தனது விருத்தாந்தத்தை எல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று மணிக்குத் தோன்றியது. வீட்டை விட்டு வெளியேறியதிலிருந்து தன்னிடம் இந்த மாதிரிப் பேசிப் பழகி, தன் மனப்பாரத்தைக் குறைக்கச் செய்ய, இதுவரை இதுபோல் எந்த ஜீவனும் முன்வரவில்லை என்ற எண்ணம், அவனுக்கு ராஜுவின் மீது திடிரென்று ஒரு பிரியத்தையும் மதிப்பையும் உண்டாக்கியது. மணி தன்னைப் பற்றிய விவரங்களையெல்லாம் அவரிடம் சொல்லி முடித்தான். அவன் சொல்வதையெல்லாம் மிகுந்த கவனத்தோடும் அக்கறை போடும் கேட்டுக் கொண்டிருந்தார் ராஜு.

மணிசொன்னான்: