பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296



"அப்போ, புறப்படுங்கள் போகலாம்."

அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியேறும்போது, வடிவேலு முதலியார் மணியின் முதுகில் தட்டிக்கொடுத்து, "என்னப்பா மணி? இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போயிட்டே?" என்று உரிமையோடு விசாரித்துக் கொண்டார்.

"என்ன மணி, ஏன் மத்தியான வண்டியிலேயே வரலை?" என்று கேட்டான் சங்கர். அவனுக்கிருந்த குதூகலத்தில் மணியிடம் என்ன கேட்பதென்றே தெரியவில்லை.

"மத்தியான வண்டிக்கு வர முடியலை, திருநெல்வேலியிலே ராஜுவுக்கு கொஞ்சம் வேலை இருந்தது" என்று கூறிவிட்டு, மணி சங்கரிடம் மெல்லக் கேட்டான்;

"என்னசங்கர்? கமலா சௌக்கியமா?"

சங்கர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை; வெறுமனே புன்னகை செய்தான். எனினும் அவன் மனம் 'கமலாவுக்கு இனிமேல் சௌக்கியத்துக்கு என்ன குறை?” என்று எண்ணிப் பூரித்தது,

"என்ன மணி? உன்னைப் பார்த்தவுடன் நான் அப்படியே பிரமித்து விட்டேன்" என்றான் சங்கர்.

"அதைவிட, பிரமிப்புத் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது. வா, கூட்டத்துக்கு"

ஸ்டேஷனுக்குவெளியே நின்றுகொண்டிருந்த காரில் அவர்கள் நால்வரும் நெருக்கியடித்துக் கொண்டு ஏறியமர்ந்தார்கள்.

கார் ஊருக்குக் கிழக்கே கூட்டம் நடக்கவிருந்த மைதானத்தை நோக்கிப் பறந்தது.

காருக்குள்ளே இருக்கும் ஒவ்வொருவருக்கும்