பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாயிரம்

பகைநட்பை வெட்டிப் பலன்காணல்; மிக்க
தகவுடையார் நட்பு வளர்த்தல்:-மிகப்பழகிச்
சாய்த்தல்; அடைந்த திழக்கவிடல்; ஆயாமை
நீத்தல்இவை பஞ்சதந்தி ரம்

காட்டு விலங்குகளைக் காட்சிப் பொருளாக்கி
நாட்டு கதைகேட்பார் நாடோறும்-வேட்டதெலாம்
பெற்றுநலங் காண்பார்; பிறர்சூழ்ச்சி தூளாக்கி
வெற்றிகாண் பாரே விழித்து.

அன்று வடமொழியில் ஆக்கிவைத்த சூழ்ச்சிமுறை
இன்று தமிழில் இயம்பினான்-நின் றபுகழ்
நாச்சியப்பன் சொல்லின் நயந்தெளிவார்க் கெந்நாளும்
வீழ்ச்சியிலை என்றே விளம்பு.

ஐவ்கைச் சூழ்ச்சியையும் ஆராய்ந்து காண்போர்க்கே
உய்வகை தோன்றும் உயிர்வாழ்வில் -மெய்புகல்
நாச்சியப்பன் செந்தமிழில் நல்குமிதைத் தம்பிஒரு
மூச்சிலே கற்று முடி.