பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

பஞ்ச தந்திரக் கதைகள்


'காக்கையண்ணா, இந்த நரி என்னோடு நட்பாயிருக்க வந்திருக்கிறது. மிகவும் அன்பாகப் பேசுகிறது!’ என்று மான் குட்டி கூறியது.

“மானே, புதிதாக வந்தவர்களை உடனே நம்பி விடக் கூடாது. ஒருவனுடைய குலமும் முன் நடத்தைகளும் தெரியாமல், அவனுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. அப்படி இடங்கொடுத்தால், பூனைக்கு இடங் கொடுத்து மடிந்த கழுகைப் போலத் துன்பமடைய நேரிடும்’ என்று காகம் கூறியது.

அதைக் கேட்ட நரி காகத்தைப் பார்த்து, ‘ஏ காகமே, நீ இந்த மானோடு நட்புச் செய்யும் முன்பு