பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

பஞ்ச தந்திரக் கதைகள்

புகுவார்களா?’ என்று பூனை தன்னைப்பற்றி உயர்வாகப் பேசிக் கொண்டது.

கழுகு கடைசியில் அதை நம்பியது. பூனையும் தன்னோடு இருக்க அது இடங் கொடுத்தது. பூனை பிறகு கழுகுக்குத் தெரியாமல் மெல்ல மெல்ல நடந்து

சென்று, இளம் பறவைக் குஞ்சுகளைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தது. நாளடைவில் தங்கள் குஞ்சுகளைக் காணாமல் பறவைகள் தேடத் தொடங்கின. இது தெரிந்தவுடன் பூனை அங்கிருந்து ஓடி விட்டது.

தங்கள் குஞ்சுகளைத் தேடி வந்த பறவைகள், கழுகிருக்கும் பொந்தருகில் வந்து பார்த்தன. பூனை தான் கொன்று தின்ற குஞ்சுகளின் வெள்ளெலும்பு