பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டான் குலத்தைக் கூடிக் கெடுத்த காகம்

123


'கொடிய புலி தானாக வந்து வலைகோட்யில் சிக்கிக் கொண்டால் அதை விட்டு விடுவது புத்திசாலித்தன மல்ல' என்று பெரும்பாலான அமைச்சுக் கோட்டான்கள் கூறின. அந்த அமைச்சர்களிலே குருதிக் கண்ணன் என்ற கோட்டான் 'அடைக்கலம் என்று வந்த ஒருவனைக் கொல்வது அறமல்ல’ என்றது. கொடுங்கண்ணன் என்ற அமைச்சனைப் பார்த்துக் கோட்டான் அரசு கருத்துக் கேட்ட போது 'பகைவர்கள் நமக்குப் பணிந்து வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதுதான் மனுநீதி முறைப்படி சரியாகும். அவர்களைக் கொன்றவர்களையும் அவர்கள் உதவியைக் கைவிட்டவர்களையும் இதுவரை உலகத்தில் நான் பார்த்ததில்லை’ என்று கூறியது.

கொள்ளிக் கண்ணன் என்ற அமைச்சனைக் கேட்ட போது, 'பகைவர் கூட்டத்தைச் சேர்ந்தவர் களானாலும், நமக்கு இனிமையாகப் பேசி உதவ முன் வருபவர்களை நல்ல பதவி கொடுத்து ஆதரித்துக் காப்பாற்றுவதே உத்தமர்களின் கடமை. அப்படிபட்ட உத்தமர்கள் உலகில் நெடுங்காலம் நலமாக வாழ்வார்கள். கோமுட்டியின் வீட்டில் திருட வந்த கள்ளனுக்கு அந்தக் கோமுட்டி ஓர் உதவி செய்தான். அதனால் திருடன் அவனுக்குப் பதிலுக்கொரு உதவி செய்தான். அதுபோலப் பகை வர்களாலும் பயனடைய முடியும்' என்று கூறியது.

குருநாசன் என்ற கோட்டான் அமைச்சனைக் கேட்டபோது, 'கள்ளனுக்கும் பேய்க்கும் பரிசு