பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தன் வாயால் கெட்ட கழுதை

131

வயிற்றை நிரப்ப அவன் ஒரு தந்திரம் கண்டு பிடித்திருந்தான். இரவு நேரத்தில் அந்தக் கழுதையின் மேல் ஒரு புலித்தோலைப் போட்டுப் போர்த்தி, அதை அருகில் உள்ள ஒரு பயிர்க் கொல்லையில் மேயவிட்டு விடுவான். கழுதை வயிறு நிறையப் பச்சைப் பயிரை மேய்ந்து நன்றாகக் கொழுத்து வளர்ந்தது. வண்ணானுக்கும் மிகுந்த வேலை பார்த்திது.

இரவில் பயிர்க்கொல்லையைக் காவல் செய்பவர்கள் கழுதையைக் கண்டவுடன் புலி என்று நினைத்துக் கொண்டு பயந்து ஓடிப் போவார்கள். அது வேண்டுமட்டும் மேய்ந்து விட்டுப் போகும். இப்படி நெடுநாள் நடந்து வந்தது.