பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. மோசம் போன முயலும் மைனாவும்

இருப்பதற்கு இடமில்லாமல் ஒரு முயல் காட்டில் அலைந்து கொண்டிருந்தது. ஒரு மரத்தில் ஒரு பொந்து இருப்பதைக் கண்டு அதற்குள் புகுத்து இருந்து கொண்டது.

சிறிது நேரம் சென்றதும் அங்கு ஒரு மைனா வந்து சேர்ந்தது. அந்த மைனா முயலைப் பார்த்து, 'இந்தப் பொந்து நான் இருக்கும் வீடு; இதற்குள் நீ எப்படி வரலாம்?’ என்று கேட்டது. அதற்கு அந்த முயல் இது உன் வீடு என்று யாருக்குத் தெரியும்? நிழலும், மரங்களும், சாலைகளும், குளங்களும், கிணறுகளும், தண்ணீர்ப் பத்தல்களும், சத்திரங்களும் சாவடிகளும் எல்லாருக்கும் பொதுவானவை தாம். இதில் நீ உரிமை கொண்டாடுவதற்கு ஏதும் இல்லை' என்று சொன்னது.

இப்படியாக வார்த்தை முற்றி இரண்டுக்கும் சண்டை வந்துவிட்டது. தொண்டை வற்றச் சண்டை போட்ட பிறகு முயல் மைனாவைப் பார்த்து, நாம் ஏன் சண்டையிட வேண்டும்? யாராவது நடுவு நிலை உள்ளவர்களிடம் போய் நியாயம் கேட்போம்” என்று சொல்லிற்று. அதற்கு மைனா 'நம் வழக்கைத் தீர்க்கக் கூடிய நல்லவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்று கேட்டது.