பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

பஞ்ச தந்திரக் கதைகள்

யமுனை ஆற்றங்கரையில் தவம் செய்து கொண்டு ஒரு பூனையார் இருக்கிறார். அவரிடம் போய் நியாயம் கேட்போம்.' என்று முயல் சொன்னது. இதைக் கேட்டதும் மைனா பயந்து போய் 'அதன் பக்கம் நாம் போனால் அது நம்ம்மைப் பிடித்துத் தின்று விட்டால் என்ன செய்வது?' என்று கேட்டது.

இல்லை அப்படி ஒன்றும் நடக்காது. இருந்தாலும் நாம் தூரத்தில் நின்றே நம் வழக்கைச் சொல்லுவோம்' என்று சொல்லி முயல் மைனாவை அழைத்துச் சென்றது. யமுனை. ஆற்றங்கரையில் தவம் செய்து கொண்டிருந்த பூனையாரை அவை கண்டன. அவர் தவம் செய்து கொண்டிருந்த கோலத்தைக் கண்டு, 'இவர் பெரியவர்? உயர்ந்த ஞானி; நம்மைப் பிடிக்க மாட்டார்' என்று நினைத்துக் கொண்டு அந்தப்