பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறிவில்லாமல் ஒழிந்துபோன கழுதை

179

கழுதை சிறிது தூரம் சென்றவுடன், நரி அதன் அருகில் சென்று தனியாகப் பேசியது.

“ஐயோ! பாவம்! உன் உடம்பு என்ன இப்படி இளைத்துப் போய்விட்டது?" என்று கேட்டது.

“என்ன செய்வேன்?" எப்பொழுது கோபம் வந்தாலும் இந்த வண்ணான் என்னை அடிக்கிறான். சரியாகத் தீனி போடுவதே இல்லை. என் முதுகில் அவன் ஏறிக்கொள்வது மட்டு மல்லாமல்,

.

பெரிய பெரிய பொதிகளை வேறு ஏற்றிச் சுமக்கச் செய்கிறான். பொதி சுமக்காத நேரத்திலும் என்னைச் சும்மா விடுவதில்லை மாறுகால் பிணைத்துக் கட்டித்தான் விடுகிறான். இப்படி இடைவிடாமல் துன்பம் அனுபவித்தால் என் உடம்பு இளைக்காதா?’ என்று துயரத்துடன் கூறியது கழுதை.