பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

பஞ்ச தந்திரக் கதைகள்

“ உன் கதை கேட்கக் கேட்கப் பரிதாபமாக இருக்கிறது. இந்தத் துன்பம் தீர நான் ஓர் யோசனை சொல்கிறேன். கேள் என்னோடு வா. நம் காட்டரசன் சிங்கத்திடம் உன்னைக் கொண்டு போய் விடுகிறேன். அவனிடம் நீ ஓர் அமைச்சனாக இருக்கலாம். அதிகார பதவியோடு நலமாக வாழும் பேறு கிடைக்கும்" என்று இச்சகம் பேசியது நரி.

“சிங்கமா? வேண்டாம். அது மற்ற மிருகங்களையெல்லாம் அடித்துத் தின்றுவிடும். எனக்குப் பயமாயிருக்கிறது" என்றது கழுதை.

"வீணாகப் பயப்படாதே! நாங்கள் எல்லாம் இல்லையா? எங்களையெல்லாம் அடித்தா தின்று விட்டது? ஆண் யானையைத் தவிர வேறு எந்த மிருகத்தையும திரும்பிக் கூடப் பார்க்காது. உன் உயிருக்கு ஆபத்தில்லை என்பதற்கு நான் பொறுப்பு. என்ன சொல்கிறாய்?" என்று நரி கழுதையைக் கேட்டது. -

" அப்படியானால் சரி,?’ என்று கழுதை ஒப்புக் கொண்டது.

உடனே நரி அதன் கால்களில் கட்டியிருந்த கயிற்றைத் தன் பல்லினால் கடித்து அறுத்து விட்டது. பிறகு வண்ணானுக்குத் தெரியாமல், அதை அழைத்து கொண்டு காட்டுக்குள் சென்றது.

கழுதையைக் கண்டவுடனே சிங்கம் அதைப் பிடிக்கப் பாய்ந்தது. கழுதை பயந்து கதறிக்