பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அறிவில்லாமல் ஒழிந்துபோன கழுதை

181


கொண்டு ஓட்டம் பிடித்து விட்டது. வயிற்று வலி அதிகமாக இருந்ததால் சிங்கம் அதைத் தொடர்ந்து ஒட முடியாமல் நின்று கொண்டிருந்தது. நரி அதைப் பார்த்து, அரசே, என்ன இப்படி அவசரப் பட்டு விட்டீர்கள். இப்போது நான் போய் அதைத் திரும்ப அழைத்து வருகிறேன். உங்கள் கையில் கொடுத்தவுடன் அதைக் கொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு கழுதையைத் தொடர்ந்து ஓடியது.

கழுதையின் அருகில் சென்றதும் நரி என்ன? இப்படி ஓடி வந்துவிட்டாய்? என்று கேட்டது. . "போ,போ, உன் பேச்சை நம்பி வந்தேன். அந்த சிங்கம் அருகில் போவதற்கு முன்னாலேயே பாய்ந்து கொல்ல வந்தது. நல்லவேளை! தப்பி ஓடி வந்து விட்டேன். மறுபடி நீ எதற்கு வந்தாய்? என்று சினத்துடன் கேட்டது கழுதை.

ஐயையோ! பாவம், பாவம்! சிங்க மன்னனைப் பற்றி அப்படிச் சொல்லாதே. சிங்க மன்னன் இது வரை சொன்ன வாக்குப் பொய்த்ததில்லை. உலகம் புகழும் அந்த உத்தமனைப் பற்றி இப்படிப் புத்தியில்லாமல் பேசாதே.

முன் பிறப்பில் என்ன பாவம் செய்தாயோ? கழுதையாய்ப் பிறந்து வண்ணானிடம் அடிபட்டுப் பொதி சுமக்கின்றாய். உன் பாவம் தொலைய நான் ஒரு நல்ல செயல் செய்தேன். அதைப் புரிந்துகொள்