பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

பஞ்ச தந்திரக் கதைகள்


அவை ஊரிலே மேய்ந்து கொழுத்து இரண்டு கன்றுகளை ஈனும். அவை நான்கிலும் கிடைக்கும் பாலையும், நெய்யையும், விற்று மேற்கொண்டு இரண்டு பசு வாங்குவோம். ஆறு பசுக்களும் ஆறு காளங்கன்றுகளை ஈனும் . அந்த மூன்று சோடிகளையும் ஏரில் பூட்டி இருக்கிற நிலங்களை யெல்லாம் உழுது பயிரிடுவோம. விளைந்து வரும் தானியத்தை மற்றவர்களைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்று விரைவில் பணம் சேர்த்து விடுவோம்.


அந்தப் பணத்தைக் கொண்டு அரசனிடம் அனுமதி வாங்கி ஒரு பெரிய வீடும் கட்டுவோம். அந்த வீட்டில் பணமும், காசும் வைத்துக் கொண்டு தேவையான பொருள்களை வாங்கி வசதியாக வாழ்வோம். அப்பொழுது பிராமணபோசனம்