பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கழுமரமேறிய நாவிதன்

203


யின் வீட்டில் அந்த வணிகர் வீட்டுப் பிள்ளை வறுமையோடு வளர்ந்து வந்தான். வறுமையின் கொடுமை தாங்காமல் அவன் பல முறை வருந்தினான். அவனுக்குப் பதினாறு வயதான பின் ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கனவில் ஒரு சித்தர் தோன்றினார். அவர், 'தம்பி இனிமேல் நீ வருந்த வேண்டாம். காலையில் விடியுமுன் எழுந்திரு. பிறகு வீட்டையெல்லாம் சுத்தம் செய். மொட்டை அடித்துக் கொண்டு நன்றாகக் குளித்துத் தூய ஆடை அணிந்து உடலெல்லாம் திரு நீறு பூசிக்கொள். கையில் ஒரு தடியை எடுத்து வைத்துக் கொண்டு வீட்டு முற்றத்தில் தனியாகக் காத்திரு. பதினைந்து நர்ழிகை வரை நீ அங்கே காத்திருக்க வேண்டும். மதிய வேளைக்குச் சரியாக மூன்று பேர் பிச்சைக்கு வருவார்கள். சிறிதும் பதறாமல் எழுந்து கைத்தடியினால் மூளை கலங்கும்படி மூவரையும் அடிக்க வேண்டும். உடனே அவர்கள் மூன்று நிதிகளாக மாறுவார்கள். நீ நெஞ்சில் நினைத்ததெல்லாம் தருவார்கள்’ என்று சொன்னார்.

வணிகர் மகன் கண் விழித்துப் பார்த்தான். சித்தரைக் காணவில்லை. விடியுமுன் எழுந்து வீட்டைச் சுத்தம் செய்து தலையை மொட்டையடித்துக் கொண்டு, குளித்து திருநீறுபூசி முற்றம் வந்து தடியுடன் காத்துக் கொண்டிருந்தான். மதிய வேளையில் மூன்று சித்தர்கள் பிச்சைப் பாத்திரத் தோடு வந்தார்கள். குப்பென்று பாய்ந்து தடியினால் ஓங்கி அடித்தான். உடனே அவர்கள் மூன்று பொற்