பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆயிரம் பொன்னுக்கு விற்ற பாட்டு

209


அந்த வணிகர் மகனும் சிறு வயதில் தன் தந்தை சொன்ன சொற்கள் நினைவு இருந்ததால் அருமையான அந்தப் பாட்டுச் சீட்டை ஆயிரம் பொன்கொடுத்து வாங்கிக் கொண்டான். அந்தச் சீட்டைக் கொண்டு வந்து தன் வீட்டிலே உள்ள படுக்கைக்கு மேலே பட்டுக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டான்.

திசை மாறி முன்பின் அறியாத தீவுக்குப் போய்ச் சேர்ந்த வணிகன், அங்கு நடத்திய வாணிபத்தில் நிறையப் பொருள் தேடிக் கொண்டு, பத்தாண்டுகள் கழித்துத் தன் நாட்டுக்குத் திரும்பி வந்தான். கப்பலை விட்டிறங்கி ஒரு படகில் ஏறிக் கரைக்கு வந்தான். தான் இல்லாதபோது வீடு எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்பினான். ஆகவே, நள்ளிரவில் யாரும் அறியாமல் அவன் தன் வீட்டினுள் நுழைந்தான். தன் மனைவியிருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றபோது, அங்கே, அவளோடு ஓர் இளைஞன் படுத்திருக்கக் கண்டான். தன் மகன்தான் அவன் என்பதை அவனால் அப்போது சித்தித்தறித்து கொள்ள முடியவில்லை. யாரோ ஒருவனுடன் தன் மனைவி தூங்குகிறாள் என்று எண்ணி அவர்களை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவிக் கொண்டு. போனான். அப்போது மஞ்சத்தின் மேலே பட்டுக் கயிற்றில் தொங்கிய சீட்டு அவன் கண்ணில் பட்டது அதில் என்ன எழுதியிருக்கிறதென்று அறிய அதை இழுத்து விடிவிளக்கு ஒளியில் படித்துப் பார்த்தான்.