பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

பஞ்ச தந்திரக் கதைகள்

விட்டுப் போவதே தவறு? என்று கூறியது.

தவளையோ 'நான் போகிறேன்' என்று சொல்லி விட்டுப் போய்விட்டது.

மறுநாள் வலைஞன் வந்து மீன்களை யெல்லாம் பிடித்துக் கொண்டு போனான், செத்துப் பிணமாகிப் போன அந்த இரு மீன்களையும் பார்த்து. தவளை தன் மனைவியிடம், 'என்ன அறிவு சொல்லியும் கேட்காததால் இவற்றிற்கு வந்த முடிவைப் பார்’ என்று சொல்லி மிகவும் வருந்தியது.


8. பாட்டுப் பாடி அடிபட்ட கழுதை

ஒர் ஊரில் ஒரு கழுதை இருந்தது. அது ஒரு நரியோடு சேர்ந்து பயிர் மேய்வது வழக்கம். ஒருநாள் அது விலாப் புடைகள் வீங்க மேய்ந்து ஏப்பம்