பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வரங் கேட்டிறந்த நெசவாளி

219

விட்டுக் கொண்டிருந்தது. அப்போது இரவு நேரம், நிலாக் காலம்; பொழுது போவதற்கு நான் இசை பாடுகிறேன்; நீ கேள்’ என்று நரியிடம் கூறியது.

‘உன் குரல் கேட்டால் பயிர்க்காரன் வந்து கொன்று விடுவான்!'என்று நரி கூறியது.

அதன் சொல்லைக் கேளாமல் கழுதை தன் பாழான குரலெடுத்துப் பாடியது. உழவர்கள் வந்து அதை உடம்பு நொறுங்கும்படியாக அடித்து விரட்டினார்கள்.

நரி தூரத்தில் ஓடிப்போய் நின்று கொண்டு 'கழுதை மாமா, என் பேச்சைக் கேட்காததனால் தானே அடிபட்டாய்? ஏன் இந்த இறுமாப்பு!' என்று ஏசி விட்டுச் சென்றது.


9. வரங் கேட்டிறந்த நெசவாளி

நெசவாளி ஒருவன் இருந்தான். அவன் நெசவு செய்து கொண்டிருந்த தறிமரம் ஒரு நாள் முறிந்து விட்டது. அதற்குப் பதில் மரம் வெட்டிவரக் காட்டிற்குச் சென்றான். அங்கு வாகை மரம் ஒன்று இருந்தது. அதை வெட்ட அவன் முயலும்போது, அந்த வாகை மரத்தில் தங்கியிருந்த ஓர் இயக்கன், '<center{{இது என் இருப்பிடம், இதை வெட்டாதே! இதற்குப் பதில் நீ ஒரு வரம் கேள். தருகிறேன். என்று கூறினான்.