பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தெய்வ அருளால் நலம் கண்ட தீயோர்

229


ஊரில் மட்டும் இருக்காதே என்று அரசன் சொன்னான். அப்படியே குருடன் இளவரசியைக் கூட்டிக் கொண்டு போனான்.

இளவரசியும், குருடனும், கூனனும் மற்றொரு நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தார்கள். இளவரசிக்குக் குருடன் மேல் அன்பில்லை; கூனன் மேல்தான் ஆசையாய் இருந்தது. ஆகவே குருடனைக் கொல்வதற்காகச் செத்தபாம்பு ஒன்றை அடுப்பிலிட்டுக் கறியாக்கினாள். குருடனைக் கூப்பிட்டு அதற்கு தெருப் பூட்டும்படி கூறினாள். குருடனும் அடுப்பின் அருகில் இருந்து விறகைத் தள்ளித் தீ எரித்துக் கொண்டிருந்தான். அப்போது வெந்து கொண்டிருந்த பாம்பின் ஆவி அவன் கண்களைத் தாக்கியது. அதனால் ஒளி இழந்த அவன் கண்கள் தெளிவாகத் தெரிந்தன. தூரத்தில் கூனனுடன் கூடி இளவரசி குலாவுவதை அவன் தன் இரு கண்களாலும் பார்த்தான். அதனால் ஆத்திரம் கொண்டு அந்தக் கூனனைப் போய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து அப்படியே கைகளால் சுழற்றி இளவரசியின் மேல் எறிந்தான். அதனால் இளவரசியின் நடு முலை மறைந்தது. கூனனுடைய கூனும் நிமிர்ந்துவிட்டது.

தீதை நினைக்கப் போய் எல்லாம் நன்மையாய் முடிந்தது. தெய்வத்தின் அருள் இருந்தால் எல்லாம் நன்மையாக முடியும்.