பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எருதும் சிங்கமும்

25


‘நல்ல இடத்தை அடைந்து, தங்கள் நல்ல காலத்தினாலே, நல்ல பொருளை அடைந்து நல்ல தோழர்களைப் பெற்று, நடுக்கமில்லாத மனவுறுதி படைத்தவர்கள் சில நாள் இன்ப வாழ்வு வாழ்வார்கள். மற்றவர்கள் எப்போது எந்தக் கணத்தில் அழிவார்கள் என்று சொல்ல முடியாது’ என்று கூறி முடித்தது நரி.

‘நரியப்பா, இதெல்லாம் எதற்காகச் சொல்கிறாய். அரசர் உனக்கு என்ன கேடு நினைத்தார்?” என்று காளை கேட்டது.

‘அரசர் வஞ்சகமாய் நடந்து கொண்டாலும் அதை வெளியில் சொன்னால், சொல்பவர்களுக்குத் தான் அவமானம் உண்டாகும். இந்தச் செய்தி அரசனுக்குச் சிறிது தெரிந்தாலும் என்னைக் கொன்று விடுவான்?.

'இருந்தாலும் நீயும் நானும் மனம் ஒன்றிய நண்பர்கள். ஆகையால்தான் சொல்கிறேன். நாளைக்குச் சிங்கமன்னன் தன் சேனைகளுக்கெல்லாம் ஒரு பெரிய விருந்து வைக்கப் போகிறான். அதற்கு உன்னைத்தான் கொன்று கூறு போட எண்ணியிருக்கிறான்' என்று கூறி முடித்தது நரி.

இதைக் கேட்டதும் அந்த எருதின் நெஞ்சு கலங்கியது. நரியப்பா, அரசன் என்னைக் கொல்ல நினைத்ததற்கு என்ன காரணம்?’ என்று நாக்குழறக் கேட்டது. ப_2

.