பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

பஞ்ச தந்திரக் கதைகள்


இருந்த ஒரு பொந்துக்குக் கரும்பாம்பு ஒன்று புதிதாக வந்து சேர்ந்தது. அந்தக் கரும்பாம்பு, பெண்காகம் இடுகின்ற முட்டைகளை எல்லாம் ஒன்று விடாமல் குடித்துக் கொண்டிருந்தது. காகங்களால் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை.

ஆண் காகம் தன் உயிர் நண்பனான நரி யொன்றிடம் போய் யோசனை கேட்டது.

'அந்தப் பாம்பைக் கொல்வதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன். அரசியாரின் குளியல் அறைக்குப் பறந்து போ. அவர்கள் குளிக்சுச் செல்லும் போது கழற்றி வைக்கும் நகைகளில் ஒன்றைக் கொண்டு வந்து பொந்தில் போட்டு விடு. பிறகு என்ன நடக்கிறது என்று பார்!' என்றது நரி.